முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

Published By: Digital Desk 2

18 May, 2025 | 12:49 PM
image

முள்­ளி­வாய்க்கால்  நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முள்­ளி­வாய்க்கால் பிர­தேசம் இந்தக் காலப் பகு­தியில் இரத்­தத்­தினால் தோய்ந்­தி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

இறுதி யுத்­தத்தின் போது பேரி­ழப்­பு­களை தமிழ் மக்கள் சந்­தித்­தி­ருந்­தனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை­யான ஒரு வார காலத்தில் முள்­ளி­வாய்க்­காலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர். தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த மக்கள் மீது பல­முனைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

இதனால் ஏற்­பட்ட இழப்­புகள் விப­ரிக்க முடி­யாத சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்த இறுதி யுத்­தத்தின் போது 90 ஆயிரம் பெண்கள் வித­வை­க­ளாக்­கப்­பட்­டனர். 9   ஆயிரம் சிறு­வர்கள் அநா­த­ர­வாக்­கப்­பட்­டனர். ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் காணாமல் போகச் செய்­யப்­பட்­டனர். படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள், படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­வர்கள், படை­யி­ன­ரிடம்  ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்கள் என்று காணா­மல்­போ­னோ­ரது சோக வர­லா­றுகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இவ்­வாறு முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­பட்ட இழப்­பு­களை நினை­வு­ கூர்ந்து முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் வரு­டந்­தோறும் மே மாதம் 18ஆம் திகதி நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்­ளி­வாய்க்கால் வாரம் நினை­வு­ கூ­ரப்­ப­டு­கின்­றது.

16 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இம்­மு­றையும் முள்­ளி­வாய்க்கால் வாரம் கடந்த 6 தினங்­க­ளாக அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இன்று முள்­ளி­வாய்க்கால் நினைவு முற்­றத்­திலும் வடக்கு, கிழக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. முள்­ளி­வாய்க்­காலில் மக்­கள்­பட்ட அவ­லத்தை வெளிக்­காட்டும் வகையில் கடந்த ஒரு வார கால­மாக வடக்கு, கிழக்கில் முள்­ளி­வாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்­கப்­பட்டு வந்­தது.

முள்­ளி­வாய்க்­காலில் பேர­ழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்கள் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி கோரி போராடி வரு­கின்­றனர். ஆனால், 16 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் அதற்­கான நீதி இன்­னமும் கிடைக்­க­வில்லை.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் என்று மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் உறுதி வழங்­கிய போதும் உள்­ளக விசா­ர­ணையில் எது­வித முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை.

பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அர­சாங்­கங்கள் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. இதனால் உள்­ளக விசா­ர­ணைகளில் நம்­பிக்கை இழந்த மக்கள் சர்­வ­தேச விசா­ர­ணை­களை கோரும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்தி இலங்­கைக்கு எதி­ராக தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்ட போதிலும் அவற்றை மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் உரிய வகையில் நிறை­வேற்­ற­வில்லை.

இதனால் நம்­பிக்கை இழந்த தமிழ் மக்கள் இலங்­கையை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு முன்­பாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு ­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்றும் அடிப்­படை பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு பதி­லாக தமிழ் மக்­களை அடக்கி ஒடுக்கும் செயற்­பாட்­டி­லேயே ஈடு­பட்டு வந்­தது.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த தமது உற­வு­களைக் கூட முள்­ளி­வாய்க்­காலில் அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு அன்­றைய அர­சாங்கம் அனு­ம­திக்­க­ வில்லை.

இவ்­வா­றான நிலையில் பேரி­ழப்­பு­களை சந்­தித்த மக்கள் தமது உற­வு­களை நினை­வு­கூர முடி­யாத அவ­லத்தை அந்தக் காலப்­ப­கு­தியில் சந்­தித்­தி­ருந்­தனர்.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்­தலை மேற்­கொள்­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூர்­வ­தற்கும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை மேற்­கொள்­வ­தற்கும் அனு­மதி வழங்­கப்­ப­டு­கின்­றது. ஆனாலும் முள்­ளி­வாய்க்கால் அவ­லத்­துக்கு இன்­னமும் நீதியை பெற்­றுக்­கொள்ள முடி­யாத அவல நிலை நீடித்து வரு­கின்­றது. இத­னால்தான் முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லை­களை இனப்­ப­டு­கொ­லை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டிய நிலைமை புலம்­பெ­யர்ந்த தேசங்­களில் ஏற்­பட்­டுள்­ளது.

 தற்­போது கன­டாவில் இனப்­ப­டு­கொலை வாரம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. கன­டாவின் ஒன்­றா­ரியோ மாகாண பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட 104ஆம் இலக்க தமி­ழின படு­கொலை அறி­வூட்டல் வாரச் சட்­டத்தின் பிர­காரம் கடந்த 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை­யான ஒரு வார காலம் தமி­ழின படு­கொலை அறி­வூட்டல் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இதற்­கான தீர்­மானம் கனடா பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

இதே­போன்றே கன­டாவில் பிரம்டன் நகரில் தமி­ழின அழிப்பு நினை­வகம் கடந்த 10ஆம் திகதி அந்த நகரின் மேயர் பற்றிக் பிர­வு­னினால் அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­பட்­டது.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற அவ­லங்­களை பறை­சாற்றும் வகையில் கன­டாவில் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான மஹிந்த ராஜபக் ஷ, கோட்­டா­பய ராஜபக்ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவும் பயணத் தடையை கனடா விதித்­தி­ருந்­தது.

கன­டாவின் பிரம்டன் நகரில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள தமி­ழின அழிப்பு நினை­வகம் தொடர்பில் தற்­போது தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் கடும் விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் எரிக் வோல்ஸை அழைத்த வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் இந்த விடயம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

எவ்­வித ஆதா­ர­மு­மற்ற இனப்­ப­டு­கொலை குற்­றச்­சாட்டு மற்றும் அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட நினைவுச் சின்­னத்தை நிர்­மா­ணிப்­ப­தற்கு வழங்­கப்­பட்ட ஒப்­புதல் என்­பன தொடர்பில் இலங்கை கடும் அதி­ருப்தி கொண்­டுள்­ள­தாக அமைச்சர் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்­றது இனப்­ப­டு­கொலை அல்ல என்ற நிலைப்­பாட்டை அர­சாங்கம் கொண்­டி­ருக்­கி­றது. பயங்­க­ர­வா­தி­களை அழித்தோம் என்றே கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால், தற்­போது பத­வி­யேற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்போம் என்று கூறியே ஆட்­சிக்கு வந்­தி­ருந்­தது.

அந்த அர­சாங்­கமும் இறுதி யுத்­தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உரிய வகையில் பொறுப்­புக்­கூறத் தயா­ராக இல்லை. ஐ.நா. மனித உரிமை பேர­வையில் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னைய அர­சாங்­கங்­களின் கொள்­கை­யையே தற்­போ­தைய அர­சாங்­கமும் கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 2022ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை மேலும் ஒரு வரு­டத்­துக்கு நீடிப்­ப­தற்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பான சாட்­சி­களை திரட்டும் ஐ.நா.வின் பொறி­மு­றைக்கும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தது. தற்­போதும் இனப்­ப­டுகொலை விவ­கா­ரத்தில் கன­டா­வுடன் அர­சாங்கம் முட்டி மோது­கின்­றது.

உண்மையிலேயே முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு உரிய விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க அரசாங்கம் முன் வருமாக இருந்தால் இந்த விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படப் போவதில்லை.

அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் உரிய அக்கறையை காண்பிக்காது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு முன் வராது தமிழ் மக்களுக்கு சார்பான கனடா உட்பட சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதும் அதிருப்தி வெளியிடுவதும் எந்த வகையிலும் பயனளிக்கப்போவதில்லை.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை இல்லாது ஒழிக்க வேண்டுமானால் அரசாங்கமானது முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது உரிய வகையில் நீதியை வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் இனப்படுகொலை விவகாரமானது சர்வதேச அளவில் பேசப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள்...

2025-06-15 17:25:28
news-image

வரலாற்றுத் தவறுகளை நினைவில் கொண்டு எதிர்காலத்தை...

2025-06-08 14:10:51
news-image

ஐ.நா.வின் தவறுக்கு இனியாவது பரிகாரம் காணப்பட...

2025-06-01 11:01:57
news-image

சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக்...

2025-05-25 16:27:45
news-image

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

2025-05-18 12:49:46
news-image

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரதிநிதித்துவமும்...

2025-05-04 11:22:25
news-image

இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்

2025-04-27 14:11:28
news-image

அரசியல்தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஆணித்தரமான நிலைப்பாடு...

2025-04-12 16:49:51
news-image

மாகாணசபை தேர்தல் விடயத்தில் தடுமாறத் தொடங்கும்...

2025-04-06 09:36:11
news-image

சர்வதேச தடைகளை தவிர்ப்பதற்கு என்ன வழி?

2025-03-30 12:27:56
news-image

புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன்...

2025-03-23 13:13:07
news-image

அரசியலமைப்பு விடயத்தில் காலம் கடத்தும் அரசாங்கத்தின்...

2025-02-09 15:10:34