கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி..!

Published By: Digital Desk 3

18 May, 2025 | 10:33 AM
image

இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று  பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு...

2026-06-07 12:40:35
news-image

H-1B விசா முறையை முற்றிலுமாக மாற்றியமைக்க...

2026-06-07 12:04:47
news-image

39 நாடுகளுக்கான டொனால்ட் ட்ரம்பின் 'குடிவரவுத்...

2026-06-07 10:55:46
news-image

ஈரான் சொத்துக்களை வளைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக...

2026-06-07 10:13:36
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 12...

2026-06-07 11:18:54
news-image

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் ‘சதை தின்னும்...

2026-06-06 17:15:03
news-image

அமெரிக்க - ஈரான் போரினால் உலகளவில்...

2026-06-06 17:28:42
news-image

உலகக் கிண்ண கால்பந்து 2026: ஈரான்...

2026-06-06 14:17:49
news-image

நேரடிப் பேச்சுவார்த்தைக்கான ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார்...

2026-06-06 12:48:59
news-image

சர்வதேச விண்வெளி காற்று கசிவு: 5...

2026-06-06 11:46:43
news-image

ஆபிரிக்காவில் பரவும் எபோலாவை கட்டுப்படுத்த 6...

2026-06-06 12:10:58
news-image

உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் !...

2026-06-06 10:24:36