ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பின் ஆறாம் நாளான இன்று இலங்கை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது

17 May, 2025 | 09:25 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை (17) இலங்கைக்கு நான்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜிந்தினி இலங்கைக்கான முதலாவது வெண்கலப் பதக்கத்தை கடந்த புதன்கிழமை வென்ற பின்னர் இன்றைய தினம் மேலும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் இலங்கைக்கு கிடைத்தன. இதற்கு அமைய இதுவரை 5 வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

சத்சர சத்துமின வர்ணகுலசூரிய, அரவிந்த வித்தான ஆராச்சிலாகே ஜயதிஸ்ஸ ஆகிய வீரர்களும் பவனி கவிஷா முத்துகல, சப்ரினா ரஹீம் ஆகிய வீராங்கனைகளும் தத்தமது அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கங்களை வெல்ல நேரிட்டது.

இளையோர் ஆண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் நூர்கான் குமர்பெக்கோவுக்கு பலத்த சவாலாக போட்டியிட்ட இலங்கை வீரர் சத்சர சத்துமின வர்ணகுலசூரிய ஐந்து மத்தியஸ்தர்கள் வழங்கிய 27 - 29, 26 - 29, 28 - 29, 27 - 29, 28 - 29 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 0 - 5 என தோல்வி அடைந்தார்.

இளையோர் ஆண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் நிக்மன் நிக்மெட் என்பவரின் தாக்குதல்களுக்கு இலங்கை வீரர் அரவிந்த வித்தான ஆராச்சிலாகே ஜயதிஸ்ஸவினால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஐந்து மத்தியஸ்தர்கள் வழங்கிய 24 - 30, 23 - 30, 24 - 30, 26 - 30, 25 - 30 என்ற புள்ளிகளின் அடிப்படையில் 0 - 5 என ஜயதிஸ்ஸ தோல்வி அடைந்தார்.

இளையோர் பெண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் நடுநிலையாளராக போட்டியிட்ட இந்தியாவின் குமாரி சன்ச்சலிடம் இலங்கையின் பவனி கவிஷா முத்துகல தோல்வி அடைந்தார்.

பவனி கவிஷா பல சந்தர்ப்பங்களில் எதிராளியான குமாரி சன்சலியை தாக்கியவாறு மத்தியஸ்தர்களின் புள்ளிகளைப் பெற்றவண்ணம் இருந்தார். ஆனால், இறுதியில் 28 - 29, 29 - 28, 28 - 29, 28 - 29, 27 - 30 என்ற புள்ளிகள் அடிப்படையில் 1 - 4 என பவனி கவிஷா தோல்வி அடைந்தார்.

இளையோர் பெண்களுக்கான 52 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை ஆப்துமெசிட்டோவா ரக்மினாவின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை வீராங்கனை சப்ரினா ரஹீம் 2ஆம் சுற்றில் போட்டியை நிறுவதற்கு ஒப்புக்கொண்டு தோல்வி அடைந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 14:40:39
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18
news-image

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின்...

2025-06-19 05:54:08
news-image

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு லங்கா...

2025-06-18 14:14:33
news-image

பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

2025-06-18 12:26:58
news-image

ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்ட...

2025-06-17 21:50:43
news-image

அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர்...

2025-06-17 19:32:38
news-image

அணித் தலைவர் சன்டோ, ரஹிம் ஆகியோர்...

2025-06-17 14:57:43
news-image

டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார,...

2025-06-17 12:22:55
news-image

மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC...

2025-06-17 12:13:14
news-image

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று...

2025-06-17 01:25:54