தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது : சுவீடனில் சாணக்கியன் சுட்டிக்காட்டு

Published By: Digital Desk 2

16 May, 2025 | 09:16 PM
image

(நமது நிருபர்)

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

சுவீடன் ஸ்டாக்ஹோமில் 12ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இடம்பெற்ற 'அமைதி மற்றும் மேம்பாட்டு மன்றம் 2025' என்னும் கருத்தரங்கில் விசேட அழைப்பின் பெயரில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இலங்கையின் பிரச்சினை ஆய்வு மற்றும் கூட்டு உருவாக்கம் மூலம் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் என்னும் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற அநீதிகள் இனப்படுகொலைகள் மற்றும் அரசியல் கொலைகள் சம்பந்தமான சர்வதேச பார்வையானது குறைவடைந்துள்ளது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் உலகில் பல பகுதிகளில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வகை மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் சில நாடுகளில் இடம்பெற்றன,இடம்பெற்று வருகின்றன.

ஈராக், சிரியா, மியான்மார், ரஷ்யா, இஸ்ரேல், உக்ரேன், பலஸ்தீன் ஆகிய நாடுகள் அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.

இந்நாடுகள் அனைத்தும், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாக சர்வதேச அமைப்புகளால் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவை ஆகும்.

இந்த நாடுகளில் காட்டப்படுகின்ற அதீதமான கவனம் காரணமாக இலங்கையில் நிகழ்ந்த அநீதிகள் தொடர்பான கரிசனைகள் குறைவாக காணப்படுகின்றன.

யுத்தம் மௌனிக்கப்பட்டும் நாட்டின் அரசியல் நிலைமை பொருளாதாரம் என்பன ஸ்திரநிலையில் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. அதிலும் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும் சர்வதேசத்தின் பார்வை எமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் அழுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான பொருளாதார பலம்மிக்க நீதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் அழுத்தம் மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது என்றார்.

இக்கருத்தரங்கில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள் உட்பட உலக வங்கி, சர்வதேச  நாணய நிதியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்திரை வரியை அதிகரிப்பதற்கான தீர்வை (விசேட...

2025-06-19 18:46:37
news-image

கொழும்பில் நடைபெற்ற ADB இன் ‘பொருளாதார...

2025-06-19 18:45:09
news-image

தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

2025-06-19 15:31:59
news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:25:17
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:36:39
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56