டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க முடியும் - முர்து பெர்னாண்டோ

Published By: Digital Desk 2

15 May, 2025 | 09:02 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை ஊடாக ஊழல் புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியுமென பிரதம நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முர்து பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமான  அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமான ''Govpay'' ஐ உயர்நீதிமன்ற கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதம நீதியரசர் இதனை தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அனைத்து விதமான கொடுப்பனவுகளையும் இந்த மென்பொருளை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.  இதற்கமைய வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், வணிக  மேல்முறையீடு தாக்கல் கட்டணங்கள், நட்டயீடு, முறைப்பாடளித்தல் கட்டணங்கள், மற்றும் சத்தியப்பிரமாணங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கொடுப்பனவுகளை இதன் மூலமாக இலகுவாக செலுத்த முடியும்.

முன்னதாக இந்த மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரச நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் எதிர்வரும் நாட்களில் பல அரச நிறுவனங்களை இணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 

இங்கு மேலும் உரையாற்றிய பிரதம நீதியரசர்,

இந்த டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் ஊடாக சட்டரீதியான பணக் கொடுக்கல் வாங்கல் முடிவு கொண்டு வரப்படுகிறது.

கடந்த 200 வருடங்களாக நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் நீண்ட வரிசைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் உள்ளிட்ட பாரம்பரிய முறைமைகள் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது.

அதேபோன்று சமூகத்தையும் முழு அரச கட்டமைப்பையும் சீர்குலைக்கும் கொடிய புற்றுநோயாக கருதப்படும் ஊழலை இந்த டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் பயன்பாட்டின் ஊடாக இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதாக நான் நம்புகிறேன். எம்மால் குறுகிய காலப்பகுதிக்குள் ஊழல் இல்லாத சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்திரை வரியை அதிகரிப்பதற்கான தீர்வை (விசேட...

2025-06-19 18:46:37
news-image

கொழும்பில் நடைபெற்ற ADB இன் ‘பொருளாதார...

2025-06-19 18:45:09
news-image

தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

2025-06-19 15:31:59
news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:25:17
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:36:39
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56