உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில் எதிர்க்கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தை - துமிந்த திஸாநாயக்க

15 May, 2025 | 09:03 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகள் இணைந்து சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் தயாராக இருக்கின்றோம். இது குறித்து விரைவில் சகல எதிர்க்கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. வெற்றி பெற்றுள்ளவற்றில் கூட 50 சதவீதமான உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. அவற்றில் எதிர்க்கட்சிகளுக்கே அதிகாரம் கிடைத்துள்ளது. 

இது தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் இணைந்து சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கமையவே இம்முறை தேர்தலில் களமிறங்கிய சகல எதிர்க்கட்சிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றன. 

மக்கள் செய்தியொன்றை வழங்கியிருக்கின்றனர். அரசாங்கம் சபைகளை அமைக்கும்போது அதற்கான பதிலை நாம் வழங்குவோம்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியைமைத்து அழுத்தத்தை பிரயோகிப்போம். அதனை விடுத்து அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் தொடர்ந்தும் செல்வதற்கு இடமளித்தால் எமக்கு இந்த நாடும் இல்லாமற்போகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்திரை வரியை அதிகரிப்பதற்கான தீர்வை (விசேட...

2025-06-19 18:46:37
news-image

கொழும்பில் நடைபெற்ற ADB இன் ‘பொருளாதார...

2025-06-19 18:45:09
news-image

தோல்விகளின் மும்மூர்த்தியாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

2025-06-19 15:31:59
news-image

கொழும்பு பங்குச் சந்தை ஐந்தாவது நாளாக...

2025-06-19 18:25:17
news-image

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச்...

2025-06-19 18:36:39
news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56