உள்ளூராட்சி நிர்வாகங்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது - வஜிர அபேவர்தன

14 May, 2025 | 07:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகிறோம்.  எதிர்வரும் சில தினங்களில் அது தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  45 இலட்சத்தி 3ஆயிரத்தி 930  வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக 59 இலட்சத்தி 6 ஆயிரத்தி 880 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, அவர் 1.1 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார், மேலும் பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அவர் 2.3 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்ற  தேர்தல்களின் வரலாற்றைப் பார்க்கும்போது, ஜேஆர் . ஜெயவர்த்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று, இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்களில் அனைத்து அதிகாரங்களையும் பெற்றார். பின்னர், ஜனாதிபதி பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரும் அவ்வாறே வெற்றி பெற்றிகொண்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் 2001 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது, இலங்கை முழுவதும் சென்று அத்தனகல்லா உட்பட உள்ளூராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற பாடுபட்டார். 

தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஒரு அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகு,வரலாற்றுத் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. முழு இலங்கை மக்களும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையான செய்தியைக் கொடுத்துள்ளனர் என்றே நினைக்கிறேன். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில்  50 வீத வாக்குகளைப் பெற அரசாங்கம் தவறியுள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் பொய்கள் அல்லது தவறான தகவல்களை சமூகமயமாக்குவதன் இறுதி விளைவு என்றே நான் நினைக்கிறேன். எனவே, கூட்டு எதிர்க்கட்சி ஒற்றுமையாகச் செயல்பட்டுள்ளது.

அவர்களால் அதிகமான சபைகளில் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற முடிந்துள்ளன எனவே எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டுள்ள சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் சில தினங்களில் எமது நிலைப்பாட்டை வெளியிடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16