(நெவில் அன்தனி)
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்குகின்ற நிலையில் தனது தடையை மறந்துவிட்டு புதுமனிதனாக இறுதிப் போட்டியை கெகிசோ ரபாடா எதிர்கொள்வார் என தென் ஆபிரிக்கா நம்புகிறது.
தடைசெய்யப்பட்பட்ட ஊக்கமருந்து அல்லது போதைப் பொருள் பாவித்த குற்றத்தின்பேரில் ரபாடாவுக்கு தடைவிதிககப்பட்டது. இதனை அடுத்து அவரது நல்வாழ்வு குறித்து கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம்) தனது கரிசனையை வெளியிட்டது.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துதை அல்லது பொதைப் பொருளை ரபாடா பாவித்துள்ளார் என்பது பரிசோதனையில் நிரூபணமானதை அடுத்து அவருக்கு ஒரு மாத கிரிக்கெட் தடைவிதிக்கப்பட்டது. இந்த விடயத்தை அறிந்த உடனேயே ரபாடாவின் நல்வாழ்வு குறித்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் அக்கறை செலுத்தத் தொடங்கியது.
ரபாடா தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து அல்லது போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுபவர் அல்லர் என்பதை பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் டெம்பா பவுமா, தேசிய அணி மற்றும் உயர் செயல்திறன் நிலைய பணிப்பாளர் எனொக் நிக்வே ஆகியோர் புரிந்து கொண்டு ரபாடா குறித்து திருப்தி அடைந்துள்ளனர்.
இந்தத் தடையைத் தொடர்ந்து நல்வாழ்வு தொடர்பாக நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ள ரபாடா, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்.
மும்பை இண்டியன்ஸ் கேப் டவுன் அணிக்கும் டேர்பன் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான SA20 போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் திகதி ரபாடா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்திருப்பது கண்டறியப்பட்டது.
எவ்வாறாயினும் அவர் என்னவகையான தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளைப் பாவித்தார் என்பதை ஜூன் மாதம் 4ஆம் திகதி உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஊக்கமருந்து பாவனை இல்லாத விளையாட்டுத்துறைக்கான தென் ஆபிரிக்க நிறுவனம் அறிவிக்கவுள்ளது.
அதாவது ரபாடாவின் மேன்முறையீட்டுக்கான 30 தின கால அவகாசம் முடிவடைந்த பின்னரே அந்த அறிவிப்பு விடுக்கப்படவள்ளது.
அந்த நிறுவனத்தின் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான விதிகளின் பிரகாரம் கெனபிஸ், கொக்கெய்ன், ஹெரொய்ன் அல்லது மெய்மறந்த மகிழ்ச்சிக்கான ஊக்கமருந்து ஆகிய நான்கில் ஒன்றை ரபாடா பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ரபாடா ஒரே ஒரு தடவை மாத்திரம் பரவசம் அடைவதற்காக அவற்றில் ஒன்றைப் பாவித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை அல்லது போதைப் பொருளை ரபாடா பாவித்தார் என்ற தகவல் வெளியானது முதல் அவருடன் நல்வாழ்வு குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வந்ததாக ஊடக சந்திப்பில் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பின்போதே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தென் ஆபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டது.
மூன்றாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறியுள்ள தென் ஆபிரிக்கா சந்திக்கவுள்ளது.
இறுதிப் போட்டி லண்டன், லோர்ட்ஸ் விளையாட்ரங்கில் ஜூன் மாதம் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களில் போட்டியில் முடிவு கிட்டாவிட்டால் 16ஆம் திகதி போட்டி தொடர்ந்து நடத்தப்படும்.
இறுதிப் போட்டிக்கான தென் ஆபிரிக்க கிரிக்கெட் குழாத்தில் ரபாடா தலைமையிலான 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அவர்களில் மூவர் இறுதிப் போட்டியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆபிரிக்க குழாம்
டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, ஏய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கேஷவ் மஹராஜ், மார்க்கோ ஜென்சன், கோர்பின் பொஷ், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM