பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (13) அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.
இதன் காரணமாக கென்டிஷ் டவுன் சுற்றுப்புறத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு விடுத்துள்ளார்.
அந்த வீட்டின் நுழைவாயிலில் திங்கட்கிழமை (12) தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக இருந்தமையினால் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபருக்கு மேலும் இரண்டு தீ விபத்து சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM