ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதி

Published By: Vishnu

12 May, 2025 | 11:05 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று திங்கட்கிழமை (12) ஆரம்பமான ASBC ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு குறைந்தது 19 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இந்த சம்பியன்ஷிப்புக்காக   நடத்தப்பட்ட பகிரங்க குலுக்கல் இலங்கைக்கு அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொடுப்பதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் வட பகுதியிலிருந்து வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜேந்தினி, உதயகுமார் கீர்த்தனா ஆகிய இருவர் பதக்கங்கள் வென்று வரலாறு படைக்கவுள்ளனர். அவர்கள் இருவரும் முடியப்பு நிக்சன் ரூபராஜ் பயிற்சி அளித்து வருகிறார்.

இதேவேளை இரட்டைச் சகோதரிகள் உட்பட 3 சகோதரிகள் இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் சாதனை படைக்கவுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இலங்கை சார்பாக சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

பெர்னாண்டோ இரட்டைச் சகோதரிகளான சச்சினி, யஷினி ஆகியோருடன் அவர்களது இளைய சகோதரி ஹிருணியும் இப் போட்டியில் பங்குபற்றுகின்றார். அவர்களில் இரட்டைச் சகோதரிகளுக்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

பதக்கங்கள் வெல்லக்கூடிய இலங்கையர்கள்

முதியான்சலாகே நரசிங்க (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 75 கி.கி.), ஹன்சனி நாயக்கரத்ன (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 63 கி.கி.), தருஷிகா நாகந்தலகே நெத்மி (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 81 கி.கி.) ஆகிய மூவரும் நேரடியாக இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதன் காரணமாக இந்த மூவருக்கும் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை, எஸ். தசுன்ப்ரிய (22 வயதுக்குட்பட்ட ஆண்கள் 48 கி.கி.), நெத்மி பெரேரா (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 48 கி.கி.), சச்சினி பெர்னாண்டோ (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 50 கி.கி.), யஷினி பெர்னாண்டோ (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 52 கி.கி.), என். சந்தீப்பனி (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 54 கி.கி.), வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜேந்தினி (22 வயதுக்குட்பட்ட 57 கி.கி.) மற்றொரு வவுனியா வீராங்கனை உதயகுமார் கீர்த்தனா (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 60 கி.கி.), பவனி முத்துகல (இளையோர் பெண்கள் 48 கி.கி.), எச். விஜேசிங்க (இளையோர் பெண்கள் 63 கி.கி.), தெவ்மி சஞ்சனா (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 66 கி.கி.) ஆகியோர் நேரடியாக அரை இறுதிகளில் விளையாடவுள்ளனர். எனவே இந்த 13 பேருக்கும் ஏதாவது ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இவர்களை விட 17 மற்றும் 18 வயதுடைய இளையோருக்கான பெண்கள் பிரிவில் பங்குபற்றும் சப்ரினா ரஹிம் (52 கி.கி.), ஹிருணி பெர்னாண்டோ ((54 கி.கி.), புன்சரா தித்தகல (57 கி.கி.) ஆகியோரும் அரை இறுதிகளில் பங்குபற்றவிருப்பதால் அவர்களுக்கும் பதக்கங்கள் கிடைக்கவுள்ளன.

அரை இறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் மே 20ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும்.

அதற்கு முன்னர் சகல பிரிவுகளுக்குமான கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்படும்.

இது இவ்வாறிருக்க, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள ஐந்து இலங்கையர்கள் அப் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிகளுக்கு முன்னேறினால் அவர்களுக்கும் பதக்கங்கள் கிடைக்கும்.

ஜி. வர்ணகுலசூரிய (48 கி.கி.), நிலூஷ டி தத்சர (51 கி.கி.), வி.எஸ். ஹெட்டிஆராச்சி (51 கி.கி.), ஏ. ஜயதிஸ்ஸ (57 கி.கி.), துவான் ஆசில் முராஜுதீன் (60 கி.கி.) ஆகிய ஐந்து இலங்கையர்கள் குத்துச்சண்டை கோதாவில் செவ்வாய்க்கிழமை (13) குதிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14