இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கை துறைமுக மற்றும் விமான நிலைய செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ள ஆராய்வு !

Published By: Digital Desk 2

12 May, 2025 | 12:03 PM
image

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி காரணமாக, துறைமுகங்களுக்கு மேலதிக கப்பல்கள் வருவதற்கான கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றவண்ணம் உள்ளன. அவற்றை வினைத்திறனுடன் கையாள்வதற்கும் தற்போதைய செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் காணப்படும் இயலுமைகள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. 

துறைமுகங்கள் போன்றே விமான நிலையங்களும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உலகளாவிய அரசியல் சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி துறைமுகம் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களின் முனைய (Terminal) அதிகாரிகள், கப்பல் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சுங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்

2025-06-24 13:24:21
news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38