வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராக புதிதாகப் பதவியேற்றிருக்கும் அனந்தி சசிதரன் இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ் ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஐலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை வடக்கு மாகாண அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கடந்த 29 ஆம் திகதி ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்று இருந்தனர்.
பதவியேற்ற அன்றைய தினமே கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற கந்தையா சர்வேஸ்வரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்றையதினம் அனந்தி சசிதரன் தனது கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM