எம்மில் சிலருக்கு கால் பகுதியில் அதாவது முழங்காலுக்கு கீழ்ப்பகுதியில் நரம்புகள் வீக்கம் அடைந்து காணப்படும். இதற்கு எம்மில் பலரும் போதிய கவனம் செலுத்தி வைத்தியர்களிடம் ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவதில்லை.
இந்த தருணத்தில் இத்தகைய அறிகுறி அற்றறிவேனஸ் ஃபிஸ்துலா என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்பாகவும் இருக்கக்கூடும். இதற்கு சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக எம்முடைய இதயத்தில் இருந்து குருதி இரண்டு முதன்மையான குழாய் வழியாக பயணித்து சிறிய ரத்த நாளங்களுக்கு செல்கிறது.
அதனை தொடர்ந்து நரம்புகளுக்கு சென்றடைகிறது. இந்தத் தருணத்தில் குருதியில் உள்ள நுண்ணூட்ட சத்துகள் மற்றும் ஓக்சிஜன் நுண் குழாய்களில் இருந்து உடலில் உள்ள திசுக்களுக்கு சென்றடைகின்றன.
இப்படி இயல்பாக நடைபெறும் செயல்பாட்டில் ஒரு முதன்மையான நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி எனும் இரத்த நாளத்தில் இருந்து நேரடியாக நரம்புகளுக்கு சென்றடைய கூடும்.
இதனால் சில நுண்ணிய குழாய்கள் வழியாக குருதி பயணிப்பது தவிர்க்கப் படுகிறது . இதன் காரணமாக இந்த நுண் குழாய்களுக்குள் உள்ளும் புறமும் இருக்கும் திசுக்கள் போதிய குருதியை பெறுவதில்லை.
இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் இதய செயலிழப்பு, ரத்த உறைதல் , கால்களுக்கு மிகக் குறைவான அளவில் ரத்தம் செல்தல், ரத்த நாளத்தின் உள்பகுதியில் ரத்தக் கசிவு போன்ற பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
கால்களில் வீக்கம் அடைந்த நரம்புகள் அல்லது கை, கால்களில் வீக்கம், ரத்த அழுத்த குறைவு, சோர்வு, இதய செயலிழப்பு ,உதடுகள் நிறமாற்றம், விரல் நுனிகளில் உள்ள நகங்களில் ஏற்படும் மாற்றம், இருமல், இருமும் போது ரத்தம் வருதல்.. என பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
தோலில் காயம் ஏற்படுதல், பிறவி குறைபாடு , மரபணு குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் எனும் சிகிச்சையை மேற்கொண்டவர்கள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய அறிகுறிகளை கொண்டவர்களுக்கு வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எம் ஆர் ஏ எனும் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
இவர்களுக்கு ஒழுங்கற்ற முறையில் இணைவு பெற்றிருக்கும் ரத்த நாளங்களை பிரத்யேகமான சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் சீரமைப்பார்கள். இதற்கு தற்போது நவீன முறையிலான சத்திர சிகிச்சையும் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் அம்ரீஷ் குமார்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM