அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

10 May, 2025 | 04:22 PM
image

எம்மில் சிலருக்கு கால் பகுதியில் அதாவது முழங்காலுக்கு கீழ்ப்பகுதியில் நரம்புகள் வீக்கம் அடைந்து காணப்படும். இதற்கு எம்மில் பலரும் போதிய கவனம் செலுத்தி வைத்தியர்களிடம் ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவதில்லை.

இந்த தருணத்தில் இத்தகைய அறிகுறி அற்றறிவேனஸ் ஃபிஸ்துலா என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்பாகவும் இருக்கக்கூடும். இதற்கு சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக எம்முடைய இதயத்தில் இருந்து குருதி இரண்டு முதன்மையான குழாய் வழியாக பயணித்து சிறிய ரத்த நாளங்களுக்கு செல்கிறது.

அதனை தொடர்ந்து நரம்புகளுக்கு சென்றடைகிறது. இந்தத் தருணத்தில் குருதியில் உள்ள நுண்ணூட்ட சத்துகள் மற்றும் ஓக்சிஜன் நுண் குழாய்களில் இருந்து உடலில் உள்ள திசுக்களுக்கு சென்றடைகின்றன. 

இப்படி இயல்பாக நடைபெறும் செயல்பாட்டில் ஒரு முதன்மையான நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி எனும் இரத்த நாளத்தில் இருந்து நேரடியாக நரம்புகளுக்கு சென்றடைய கூடும்.

இதனால் சில நுண்ணிய குழாய்கள்  வழியாக குருதி பயணிப்பது தவிர்க்கப் படுகிறது . இதன் காரணமாக இந்த நுண் குழாய்களுக்குள் உள்ளும் புறமும் இருக்கும் திசுக்கள் போதிய குருதியை பெறுவதில்லை.

இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் இதய செயலிழப்பு, ரத்த உறைதல் , கால்களுக்கு மிகக் குறைவான அளவில் ரத்தம் செல்தல், ரத்த நாளத்தின் உள்பகுதியில் ரத்தக் கசிவு போன்ற பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

கால்களில் வீக்கம் அடைந்த நரம்புகள் அல்லது கை, கால்களில் வீக்கம், ரத்த அழுத்த குறைவு, சோர்வு, இதய செயலிழப்பு ,உதடுகள் நிறமாற்றம், விரல் நுனிகளில் உள்ள நகங்களில் ஏற்படும் மாற்றம், இருமல், இருமும் போது ரத்தம் வருதல்.. என பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

தோலில் காயம் ஏற்படுதல், பிறவி குறைபாடு , மரபணு குறைபாடு,  சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் எனும் சிகிச்சையை மேற்கொண்டவர்கள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். 

இத்தகைய அறிகுறிகளை கொண்டவர்களுக்கு வைத்தியர்கள் அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எம் ஆர் ஏ எனும் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

இவர்களுக்கு ஒழுங்கற்ற முறையில் இணைவு பெற்றிருக்கும் ரத்த நாளங்களை பிரத்யேகமான சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் சீரமைப்பார்கள். இதற்கு தற்போது நவீன முறையிலான சத்திர சிகிச்சையும் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

வைத்தியர் அம்ரீஷ் குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு...

2025-05-12 16:16:50
news-image

அற்றரிவேனஸ் ஃபிஸ்துலா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-05-10 16:22:08
news-image

பாடாய்ப்படுத்தும் சிறுநீர் கசிவு – தீர்வு...

2025-05-09 18:12:40
news-image

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2025-05-09 15:05:46
news-image

பயனுள்ள பாட்டி குறிப்புகள்..!

2025-05-08 17:25:02
news-image

ஹெமிபரேசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-05-08 15:07:36
news-image

பச்சிளம் குழந்தைகளின் தீரா அழுகைக்கு நிவாரணமளிக்கும்...

2025-05-07 17:36:27
news-image

காது வலி…! காரணம் என்ன?

2025-05-07 16:45:10
news-image

மூளை மற்றும் தண்டுவட பாதிப்பிற்கு நிவாரணம்...

2025-05-06 16:39:12
news-image

ஆஸ்துமா பாதிப்பை உறுதிப்படுத்துவதற்கான பிரத்தியேக பரிசோதனை

2025-05-05 17:20:19
news-image

பாத எரிச்சல் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்

2025-05-05 13:09:36
news-image

மேப்பிள் சிரப் சிறுநீர் நோய் பாதிப்பிற்குரிய...

2025-05-03 16:32:07