செவ்வாய் - வெள்ளி - ஞாயிறு இந்த மூன்று நாட்களும் ராகுகாலத்தில் விளக்கேற்றுவதற்கு சிறந்த நாட்கள் ஆகும்.
நம்முடைய பிறந்த ஜாதகத்தின் அமைப்பு நன்றாக இருந்தால் வாழ்க்கையும் இனிதாக அமைந்துவிடும். ஆனால் நாம் பிறந்த ஜாதக அமைப்பில் ராகு தோஷம் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இன்றி பல தடைகள் சிரமங்கள் ஏற்படும்.
ஆகவே, செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் தடைகள் நீங்க ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவார்கள். ராகுவின் அதிதேவதை துர்க்கை என்பதால் ராகு காலத்தின் போது ராகுவின் உடல் பகுதி விஷமாக இருந்தாலும் வால் பகுதி அமிர்தமாக மாறும்.
அந்த நேரத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி -துர்க்கைக்கு மிகவும் பிடித்தமான மலர்களாகிய சிவப்பு நிறமுடைய அரளி, செம்பருத்தி, ரோஜா, செந்தாமரை மலர்களினால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் துர்க்கையானவள் செவ்வாய் தோஷத்தை நீக்கி ஆனந்தத்தை அருளுவாள் என்பது ஐதீகம்.
மேலும், தீபம் ஏற்றும் போது ‘ஐம் க்ரீம் க்லீம்’ எனும் மந்திரத்தை சொல்லி ஏற்றுவது சிறப்பு. ஓம் சாமுண்டாயை ‘விச்சே ’எனக்கூறி பயபக்தியோடு விளக்கை ஏற்றி கோவிலை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
இதற்கான விளக்கம் இதுதான்.
ஐம் என்றால் சரஸ்வதி, க்ரீம் என்றால் லக்ஷ்மி, க்லீம் என்றால் காளி, ஓம் சாமுண்டாயை விச்சே என்றால் சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம்.
“அனைத்தும் வழங்கும் தெய்வமே! வேண்டிய பலனை தந்து அருள்வாயே” என கூறி துர்க்கைக்கு நாம் இந்த மந்திரத்தை சொல்லி வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.
இதன்படி செய்துவர, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் சுபயோகம் பெற்று அம்பாளின் நல்லருள் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM