பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் மாநாட்டின் இணைத்தலைவராக இந்தியா பங்கேற்பு!

Published By: Digital Desk 2

10 May, 2025 | 12:12 PM
image

கொழும்பில் நடைபெற்ற பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் (RIMES) 4வது அமைச்சரவை மாநாட்டில், இந்தியா இணைத்தலைவராகப் பங்கேற்றது.

இந்த மாநாடு புதன்கிழமை (7) நடைபெற்றது. 

இந்திய புவி அறிவியல் துறைச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தலைமையில் இந்திய பங்கேற்பு நடைபெற்றது.

மாநாட்டில் RIMES

பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் ( RIMES ) முன்னுரிமைகள், நடவடிக்கைகள், மற்றும் அமைச்சரவை பரிசீலனைக்குரிய கோவைகள் தொடர்பாக மாநாட்டில் விவாதம் நடைபெற்றது.

மாநாட்டின் முக்கிய நிகழ்வில், இந்திய அரசாங்கம் சார்பாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பிரதிநிதித்துவப்படுத்தினார். 

அவரது உரையில், “அனைவருக்கும் முன் எச்சரிக்கை” திட்டம் உள்ளிட்ட முயற்சிகளில் இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.

பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பு (RIMES) என்பது அரசாங்கங்களுக்கு இடையிலான நிறுவனம் ஆகும் . இது உறுப்புநாடுகளுக்கு முன்கூட்டியே அபாயங்களை அறிவிக்கும் சேவைகள், திறன் மேம்பாடு மற்றும் பேரழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை வழங்குகிறது.

தற்போது இந்தியா அமைப்பின் தலைவர் நாடாக இருப்பதால், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாநாட்டின் முடிவில், உறுப்புநாடுகள் அமைச்சரவை அறிக்கையை ஏற்றுக்கொண்டன. பல்வேறு அபாயங்களுக்கான முன்னெச்சரிக்கை, காலநிலை சேவைகள் மற்றும் அபாயத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த உறுதிமொழிகளும் வெளியிடப்பட்டன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34