கொழும்பில் நடைபெற்ற பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் (RIMES) 4வது அமைச்சரவை மாநாட்டில், இந்தியா இணைத்தலைவராகப் பங்கேற்றது.
இந்த மாநாடு புதன்கிழமை (7) நடைபெற்றது.
இந்திய புவி அறிவியல் துறைச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தலைமையில் இந்திய பங்கேற்பு நடைபெற்றது.
மாநாட்டில் RIMES
பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பின் ( RIMES ) முன்னுரிமைகள், நடவடிக்கைகள், மற்றும் அமைச்சரவை பரிசீலனைக்குரிய கோவைகள் தொடர்பாக மாநாட்டில் விவாதம் நடைபெற்றது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வில், இந்திய அரசாங்கம் சார்பாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அவரது உரையில், “அனைவருக்கும் முன் எச்சரிக்கை” திட்டம் உள்ளிட்ட முயற்சிகளில் இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.
பிராந்திய ஒருங்கிணைந்த பல அபாய முன்னெச்சரிக்கை அமைப்பு (RIMES) என்பது அரசாங்கங்களுக்கு இடையிலான நிறுவனம் ஆகும் . இது உறுப்புநாடுகளுக்கு முன்கூட்டியே அபாயங்களை அறிவிக்கும் சேவைகள், திறன் மேம்பாடு மற்றும் பேரழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை வழங்குகிறது.
தற்போது இந்தியா அமைப்பின் தலைவர் நாடாக இருப்பதால், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாநாட்டின் முடிவில், உறுப்புநாடுகள் அமைச்சரவை அறிக்கையை ஏற்றுக்கொண்டன. பல்வேறு அபாயங்களுக்கான முன்னெச்சரிக்கை, காலநிலை சேவைகள் மற்றும் அபாயத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த உறுதிமொழிகளும் வெளியிடப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM