பதுளை - பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.
பசறை - உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி நேற்றைய தினம் இரவு திடீரென சுகயீனமுற்று பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் மரணம் குறித்து சந்தேகிப்பதாக வைத்தியர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறிருப்பினும், உயிரிழந்த சிறுமியின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக வைத்தியர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமியின் தாய் பல வருடங்களுக்கு முன்னர் கணவரையும் பிள்ளைகளையும் விட்டு சென்றுள்ளதாகவும் சிறுமியின் தந்தை இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM