(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஒருசில பொலிஸ் அதிகாரிகள் பணத்துக்காக பாதாள குழுக்களுக்கு தகவல்களை வழங்குகின்றனர். சிலர் பாதாள குழுக்களை பாதுகாக்கின்றனர். போதைப்பொருளையும் பாதுகாக்கின்றனர். சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. படுகொலைகள் தற்போது நாளாந்த செயற்பாடாக மாறியுள்ளது. இதனை பாராளுமன்றத்தில் குறிப்பிடுவதால் எனது உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் அதனுடனான உயிரிழப்புகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விசேட கூற்றை முன்வைத்து கேள்வியெழுப்புகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகளில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுவது தொடர்பில் கடுமையாக பேசியதுடன், தமது ஆட்சியில் சட்டவாட்சியை உறுதி செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால் கடந்த 7 மாதங்களில் 43 .இற்கும் அதிகமான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ளதுடன்,.அவற்றில் 30 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த நாட்டின் சட்டவாட்சி வீழ்ச்சியடைந்து வீதிகளில் மக்கள் கொல்லப்படுகின்றனர்.
தினமும் வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் கொலை சம்பவங்கள் பதிவாகுகின்றன. பாதாள குழுக்கள் மோதிக் கொள்கின்றனர். மேலும் பாதாள குழுக்களின் ஊடாக மற்றையவர்களும் கொல்லப்படுகின்றனர். தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்திலுமே அதிகளவான சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டின் பாதுகாப்பும் மற்றும் சட்டவாட்சியும் அழிவை நோக்கி போகின்றது. இவற்றை இங்கு பேசுவதால் எனது உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
ஒருசில பொலிஸ் அதிகாரிகள் பணத்துக்காக பாதாள குழுக்களுக்கு தகவல்களை வழங்குகின்றனர். சிலர் பாதாள குழுக்களை பாதுகாக்கின்றனர். போதைப் பொருளையும் பாதுகாக்கின்றனர். சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. சிறைச்சாலையில் உள்ள தொலைபேசிகளை கைப்பற்றும் போது இந்த நிலைமை ஏற்படுகின்றது.இந்த நிலைமை மேலும் அதிகரிக்கின்றது. எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
யுக்திய நடவடிக்கையின் போது பாதாள குழுக்களின் முக்கிய தரப்பினர் தலைமறைவாகயிருந்தனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்தனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்துகெண்டு கொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதேவேளை அப்பாவிகளும் உயிரிழக்கின்றனர். இதில் நெருக்கடிகளுக்குள் நாடு தள்ளப்படுகின்றது. போதைப் பொருட்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் தடுமாறுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம்.
இதேவேளை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் நீதியரசர் குழாமின் நீதியரசர் இந்த சிறப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அ இது சிக்கலுக்குரியது. உயர்நீதிமன்றத்தை சேர்ந்த ஒருவர் இங்கே சட்டங்களை தயாரிக்கும் போது நாங்கள் எங்கே போவது. நாங்களே சட்டத்தை தயாரிக்க வேண்டும். நீங்கள் முறைமை மாற்றத்தை எவ்வாறு செய்யப் போகின்றீர்கள் என்று தெரியவில்லை.
2024 செப்டம்பர் மாதம் முதல் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய தூப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் எவ்வளவு இடம்பெற்றுள்ளது என்றும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு,இவ்வாறான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? இதனை தடுப்பதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை கேட்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM