கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை விவகாரம் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட அறிக்கை

09 May, 2025 | 08:30 PM
image

(எம்.மனோசித்ரா)

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அத்தோடு கொட்டாஞ்சேனை மற்றும் பம்மபலப்பிட்டி பொலிஸாரிடமிருந்து விசாரணை அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் மாணவர் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் தெரியப்படுத்தாமல், பாடசாலையின் நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் முறைப்பாட்டாளர்களை பலவீனப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அவதானித்துள்ளது.

அதற்கமைய இவ்வாறான நிலைமைகளை குறைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் செயலாளர், சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கு விசேட அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கெதிரான ஏதேனுமொரு சம்பவம் பதிவான உடனேயே பாடசாலை அதிபரால் அல்லது பொறுப்பு கூற வேண்டிய தரப்பினரால் சிறுவர் அதிகாரசபையின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க வேண்டும்.

அல்லது ncpa@childprotection.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக தெரியப்படுத்த வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலுடன் தொடர்புடைய அதிபர் அல்லது ஆசிரியர்கள் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை மாணவர்களுடன் செயற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதிபர் அல்லது ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் மேலும் பாதிக்கப்படாமலிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுவர் அதிகாரசபை அல்லது பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது எக்காரணத்துக்காகவும் மாணவர்களை பாடசாலையை விட்டு நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக இடைநிறுத்தம் தீர்வைப்...

2025-05-21 02:37:24
news-image

காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு...

2025-05-21 02:32:19
news-image

மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த...

2025-05-21 02:22:18
news-image

இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின்...

2025-05-21 02:17:46
news-image

பிரதமருக்கும், வட-கிழக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

2025-05-20 23:44:10
news-image

இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகத்துக்கான விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ளது...

2025-05-20 15:39:03
news-image

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார் நியூஸிலாந்து...

2025-05-20 21:48:32
news-image

சிப்பாய்கள் என விளித்து ஜனாதிபதி இராணுவ...

2025-05-20 20:56:19
news-image

யாழ். நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள...

2025-05-20 21:14:03
news-image

வடக்கு மக்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-05-20 16:03:34
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-05-20 23:16:49
news-image

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா...

2025-05-20 19:50:14