புதிய தலைமுறை விடியல்களின் கையில் எதிர்காலத்தின் கனவுகள் தவழ்கின்றன. தொழில்நுட்பத்தின் விரல் நுனியில் உலகம் சுருங்கிவிட்ட இந்த யுகத்தில், சமூக உறவுகளின் பாலங்கள் சற்று தளர்ந்திருக்கின்றன. இந்நிலையில், பாடசாலைகள் வெறும் ஏட்டுச்சுரக்காய் களஞ்சியங்களாக மட்டும் இல்லாமல், சமூகமயமாக்கலின் உயிரோட்டமுள்ள களங்களாக உருமாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்குதான்,“வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” என்ற பாடம் ஒரு மந்திரக்கோலாக உருவெடுத்து, மாணவர்களின் சமூகப் பயணத்திற்கு ஒளி சேர்க்கிறது. ஒரு சிற்பி தனது உளியால் கல்லைச் செதுக்கி அழகான உருவத்தை உருவாக்குவது போல, இந்தப் பாடம் மாணவர்களின் உள்ளார்ந்த சமூக திறன்களை மெருகேற்றி, அவர்களைச் சிறந்த குடிமக்களாகவும், சமூகத்தின் பங்களிப்பாளர்களாகவும் மாற்றுகிறது.
சமூகமயமாக்கல் என்பது மனிதர்களின் சமூகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகள், மதிப்புக்கள், நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை கற்றுக்கொள்ளும் செயல்முறை ஆகும் வாழ்க்கை தேர்ச்சி மற்றும் குடியுரிமை கல்வி பாடங்கள் இலங்கை கலைத்திட்டத்தில் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடம் மாணவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாக எவ்வாறு பங்களிப்பு செய்ய முடியும் என்பதை கற்றுக் கொடுக்கின்றது. இதில் வாழ்க்கை தேர்ச்சி (ljfe skills) மற்றும் குடியியல் கல்வி(civic)ஆகிய பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் வாழ்க்கை தேர்ச்சி என்பது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எச்சரிக்கை, நேர்மை மன உறுதிப்பாடு போன்ற திறன்களை வளர்த்தல் ஆகும் குடியியல் கல்வி என்பது மாணவர்களுக்கு சமூகத்தில் நல்ல குடியாளர்களாகவும் அரசியல் சட்டங்கள் மனித உரிமைகள் போன்றவற்றை புரிந்து கொள்வதற்கான கல்வி ஆகும்.
இன்றைய இலங்கையில் குடியியல் பாடம் ஊடாக மாணவர்கள் எவ்வாறு சமூகமயமாக்கப்படுகின்றனர் என்பதை நாம் நுணுக்கமாக ஆராய்ந்தால் இலங்கை கலைத்திட்டத்தில் மாணவர்களை சமூகமயமாக்குவதில் குடியியல் பாடம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மாணவர்களுக்கு தனது நாட்டின் அரசியல் அமைப்பு, மக்கள் உரிமைகள் சட்டங்கள், அரசியல் கட்சிகள், அரசாங்க செயல்பாடுகள் மற்றும் மக்கள் சேவைகள் பற்றிய விளக்கத்தை வழங்குகின்றது. இப்பாடம் ஊடாக மாணவர்கள் அரசியல் மற்றும் சமூக உறுதிப்படுத்த விருத்தி அடைய வழி கோரிகின்றது. அதாவது சமுதாயம் மற்றும் அரசியல் அமைப்புகளை பற்றிய ஆரம்ப அறிவை மாணவர்கள் இப்பாடம் ஊடாக அறிந்து கொள்கின்றனர்.
மேலும் இது சார்ந்த தகவல்களை ஆராயும் போது கலை சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு வழங்குகின்ற ஒரு பிரதான பாடமாக இக்குடியியல் பாடம் விளங்குகின்றது. உதாரணமாக இப்பாடம் ஊடாக ஒரு மாணவன் கலாசாரம், மதம் இனம், மொழி ஆற்றலை விருத்தி செய்கின்றான். அதாவது தனது கலாசாரம் மட்டும் அல்லாமல் ஏனைய கலாசாரங்களை புரிந்துகொள்ளும் புரிந்துணர்வும் ஒரு தனி மனிதனிடம் விருத்தி செய்ய இந்த வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடம் முக்கிய பங்காற்றுகின்றது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
மேலும் இதுபோன்று ஏனைய மதங்கள் ஏனைய இனங்கள் எமது நாட்டில் காணப்படும் மொழி போன்றவற்றில் மனிதன் மதித்து நடப்பதற்கு இச்சமூகவியல் பாடங்களில் ஒன்றான வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடம் மாணவர்களின் சமூக மாற்றத்திற்கான பிரதான வழிகாட்டியாக செயல்படுகின்றதா என நோக்கினால் அதாவது ஒரு தனி மனிதன் மாறும் போது அச்சமுகம் மாறுபடும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. எனவே ஒரு மனிதன் மாறும் போது நன்னடத்தைகளுடன் வாழும் போது அச்சமுகம் மொத்த கூட்டாக சேர்ந்து மாறுவதற்கான பிரதான பங்களிப்பை இவ்வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடம் வழங்குகிறது. இப்பாடம் ஊடாக சமூக ஒருங்கிணை புரிந்துகொண்டு உரிமைகள் மற்றும் பொறுப்புக்களை உணர்ந்து சமூகத்தில் சிறந்த குடிமகனாக வாழ ஒருவன் பயிற்றுவிக்கப்படுகின்றான். அதனால் தான் இன்று இலங்கை பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்களுக்கு இப்பாடம் கட்டாயமான பாடமாகவும் கா.பொ.த சாதாரண தர வகுப்பில் தொகுதி பாடமாகவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜோன் டேவி என்ற அறிஞரால் 1916ஆம் ஆண்டு democracy and education என்ற புத்தகத்தில் வாழ்க்கை தேர்ச்சி மற்றும் குடியுரிமை கல்வி பொது ஒழுங்கு கொள்கையின் அடிப்படையில் சமூக மாற்றங்களை உருவாக்குவதற்கான பயிற்சி என கூறப்பட்டுள்ளது.
Jean Piaget என்பவரால் 1947ஆம் ஆண்டு குழந்தை அறிவியலில் வளர்ச்சியும் அவர்களின் சமூகமயமாக்கலும் என்ற ஆய்வில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவியல் மற்றும் வாழ்க்கை தேர்ச்சி அறிவும் முக்கியமானது எனக் கூறப்பட்டுள்ளது.
John என்ற அறிஞரால் 2015ஆம் ஆண்டு the role of civic education in promoting citizenship என்ற ஆய்வில் சமூக நெறிமுறைகள் மற்றும் குடியுரிமை பற்றிய கல்வி மாணவர்களை சமூக சமூகத்தில் நற்பண்புகளை கற்றுக் கொடுத்து அதிகமான பொறுப்பான உறுப்பினர்களாக உருவாக்க உதவுகின்றது என கூறப்பட்டுள்ளது.
வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒரு பாடமாகும். காரணம், பாடசாலை ஒரு சமூகமயமாக்கல் முகவராக காணப்படுவதால் பாடசாலைகளில் ஒரு தனி மாணவன் நிச்சயமாக சமூகமயமாக்கப்பட வேண்டும். அச்செயற்பாட்டை செய்யும் பிரதான பங்குதாரராக இன்று பாடசாலைகளில் காணப்படும் பாடங்களில் ஒன்றான இந்த வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் செய்கின்றது.
அந்த வகையில் சமூக மாற்றம் மற்றும் சமூக நலன் ஒரு தனி மனிதனுக்கு பயிற்றுவிக்கப்படுவது இந்த வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடத்தின் ஊடாக ஆகும். மேலும் தன்னிலை மற்றும் ஆராய்ச்சி திறன் இப்பாடம் ஊடாக ஒரு மாணவனிடம் ஊக்குவிக்கப்படுகின்றது. இது மட்டும் இன்றி பொதுவுடமை அதாவது தன்னை மாத்திரம் பற்றி சிந்திக்காமல் ஏனைய சமூகத்தவரையும் எமது சமூகத்தையும் ஒரு அக்கறை பாங்குடன் பொதுவுடமையாக சிந்திக்கும் திறன் இப்பாடம் ஊடாக வளர்ச்சி செய்யப்படுகின்றது.
ஒரு தனி மனிதன் அரசியல் பிராணி ஆவான். இவன் அரசியலில் பங்குபற்றும் முதல் சந்தர்ப்பம் இவன் பிறப்பின் போது பிறப்புச் சான்றிதழ் எழுதப்படுவதாகும். அடுத்ததாக அரச பாடசாலைகளில் அனுமதி பெறுவதாகும். அந்த வகையில் அரசியல் மற்றும் சமூக ஒழுங்கு, கலாசார புரிந்துணர்வு சமூகப் பரிமாணம், இயற்கை மற்றும் உலகளாவிய மாற்றங்களை எளிதாக்கள் போன்ற திறமைகள் இன்று நிச்சயமாக வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடத்தில் இலங்கையில் பாடசாலைகளில் வழங்கப்படுகின்றது என்பது ஒரு முக்கியமான ஒரு விடயமாகும்.
தற்காலத்தில் வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடம் மாணவர்களை சமூகமயமாக்குகின்றதா என்று வினாவுக்கு விடையளிக்கும் பாங்கோடு பார்போமானால் அதாவது இன்றைய காலத்தில் இப்பாடம் மாணவர்களுக்கு சமூகமயமாக்கப்படும் ஒரு பெரும் பங்களிப்பு செய்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அவைகளாக சமூக ஒழுக்கத்தை போதிக்கிறது அதாவது ஒரு மாணவன் ஒழுக்கம் மற்றும் விழுமிய சார்ந்த விடயங்களை முதன் முதலாக கற்கும் இடம் குடும்பத்திற்கு அடுத்த கட்டமாக பாடசாலையில் ஆகும். இப் பாடசாலையானது இப்பாடத்துறை ஊடாக மாணவனுக்கு ஒரு சிறந்த ஒழுக்கத்தை வழங்குகின்றது. காரணம், இப்பாடப்பரப்பில் உள்ளடக்கப்பட்ட பெரும்பாலான பாடங்கள் மற்றும் பயிற்சிகள் எமது அன்றாட வாழ்வை பிரதிபலிப்பவையாகவும் ஒழுக்கத்தை போதிக்கும் விடயங்களாகுமே காணப்படுவது ஒரு முக்கிய விடயமாகும்.
மேலும் சமூக அங்கீகாரம் மற்றும் கலாசார உணர்வை ஏற்படுத்துகின்றது, நேர்மறையான குடிமகனை உருவாக்க வழிகாட்டுகின்றது. அதாவது இவ்வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடமானது ஒரு நேர்மறையான குடிமகனின் உருவாக்குகின்றன. அதாவது எதிரான எண்ணங்கள் அற்ற சமூகத்தைப் பற்றிய ஒரு நல் உணர்வு மிக்க ஒரு தனி மனிதனை உருவாக்கும் பிரதான பங்கு வகிப்பது இன்று இலங்கை பாடசாலையில் இவ்வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் பாடமாகும். அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் அறிவு மற்றும் சமூக நலன் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறன் போன்றவை இச்சமூகமயமாக்கல் பாடம் ஊடாக இந்த பாடசாலைகளில் வழங்கப்படுகின்றது. அதாவது ஒரு பிரச்சினை ஏற்படும்போது அப்பிரச்சினையை எவ்வாறு சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது என்பது பற்றிய ஒரு அடிப்படை அறிவை இன்று இப்பாடம் பாடசாலைகளில் வழங்குகின்றது.
மேலும் நேர்மறையான ஆற்றலை வழங்கும் ஒரு பாடமாக இப்பாடம் காணப்படுகின்றது. அதாவது ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்தில் பிரதான பங்கு வகிக்கும் பண்பு நேர்மையாகும். அந்த நேர்மை பண்பு ஊக்குவிக்கப்படும் ஒரு கலை திட்ட பாடமாகவே இந்த வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வி பாடத்தை எம்மால் கூற முடியும்.
இன்றைய அல்பா தலைமுறை மாணவர்கள் பாடசாலைகளில் வாழ்க்கை தேர்ச்சியும் குடியுரிமை கல்வியும் என்ற பாடத்தின் ஊடாக சமூக மயமாக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பாடசாலைகள் வெறும் கல்விக்கூடங்கள் மட்டுமல்ல. அவை சமூகத்தின் கண்கள். இங்குதான் ஒரு குழந்தை சமூக உறவுகளைப் புரிந்து கொள்ளவும், பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளவும், நல்ல குடிமகனாக வாழ தேவையான அடித்தளத்தையும் பெறுகிறது. குறிப்பாக, அல்பா தலைமுறையைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் அவர்களின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், நேரடி சமூக இடைவினைகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், பாடசாலைகளில் வழங்கப்படும் “வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” என்ற பாடம் அவர்களின் சமூகமயமாக்கல் பயணத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
இந்தப் பாடத்திட்டம் மாணவர்களுக்கு வெறும் புத்தக அறிவை மட்டும் போதிப்பதில்லை. மாறாக, வாழ்க்கையின் நடைமுறைச் சவால்களை எதிர்கொள்ளவும், பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறது. குழுவாக இணைந்து செயற்படுதல், ஒருவருக்கொருவர் மதித்தல், கருத்து வேறுபாடுகளை ஆரோக்கியமான முறையில் கையாளுதல் போன்ற சமூக திறன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
மேலும், குடியுரிமைக் கல்வி என்ற அம்சம், மாணவர்கள் தங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு பொறுப்புள்ள குடிமகனாக சமூகத்தில் எவ்வாறு பங்களிப்பது, பொதுநலனில் அக்கறை கொள்வது, ஜனநாயக விழுமியங்களை மதிப்பது போன்றவற்றை அவர்கள் இளம் வயதிலேயே கற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டமைக்கக்கூடிய குடிமக்களை உருவாக்குவதில் இந்த பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இலங்கைப் பாடசாலைகளில் இந்த பாடத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது. பல்லின கலாச்சாரம் கொண்ட நமது நாட்டில், சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேண வேண்டியது அவசியம். “வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” என்ற பாடம் மாணவர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும் மரியாதையையும் வளர்ப்பதன் மூலம் இதற்கு உதவுகிறது.
இன்றைய அல்பா தலைமுறை மாணவர்கள் பாடசாலைகளில் “வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” என்ற பாடத்தின் மூலம் சமூகமயமாக்கப்படுவது ஒரு அவசியமான மற்றும் வரவேற்கத்தக்க அம்சம். இது அவர்களை சிறந்த தனிநபர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க உதவுகிறது. எதிர்கால சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் இந்த பாடத்தின் பங்கு அளப்பரியது.
ஓட்டுமொத்தமாக “வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும்” என்ற பாடம் வெறும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியல்ல. அது ஒரு சமூகத்திற்கான முதலீடு. பாடசாலையின் வகுப்பறைச் சுவர்களுக்குள் விதைக்கப்படும் சமூக உணர்வு, பிற்காலத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகமாக விருட்சமாக வளரும். இன்றைய மாணவர்கள் நாளைய சமூகத்தின் தூண்கள். அவர்களுக்குள் ஒற்றுமை, பல்லுயிர்மை, பொறுப்புணர்வு போன்ற விழுமியங்களை விதைப்பதன் மூலம் நாம் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இந்த பாடத்தின் மூலம் மாணவர்கள் பெறும் சமூகப் பயிற்சி, அவர்களை வெறும் தேர்ச்சி பெற்றவர்களாக மட்டுமல்லாமல், மனிதநேயம் மிக்கவர்களாகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும் மாற்றும். எனவே, பாடசாலைகளில் நிகழும் இந்த சமூகமயமாக்கல் செயல்பாடு வெறும் நிகழ்வல்ல, அது ஒரு சமூக மாற்றத்திற்கான விதை என்பதை உணர்ந்து செயற்படுவோம்.
- விவேகானந்தன் திலுக்சனா,
நான்காம் ஆண்டு, கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலதுறை, கிழக்கு பல்கலைகழகம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM