உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினை சிறுநீர் கசிவு. இது, சில வயதானவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும் சாதாரண ஒரு நிகழ்வு தான். இருப்பினும், சில பெண்களுக்கு இருமல், தும்மலின் போது, சிரிக்கும் போது, உட்கார்ந்து எழும்பும் போது, அல்லது கனமான பொருட்களை தூக்கும் போது என, பல சமயங்களில் அவர்களையும் அறியாமல் சிறுநீர் வெளியாகி விடக்கூடும். இந்த பிரச்சினைக்கு சரியான சிகிச்சை எடுத்தால் மாத்திரமே தீர்வு காணமுடியும் என்கின்றார்கள் சிறுநீரக மருத்துவ நிபுணர்கள்.
குறிப்பாக, சிறுநீரகத்தில் சேகரிக்கப்பட்ட சிறுநீரானது, நேராக வெளியேற்றப்பட மாட்டாது. அது நேராக சிறுநீர் பை (Urinary Bladder)யில் வந்து சேரும். அந்த சிறுநீர் பை நிறைந்தவுடன் தான் நமக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வே தோன்றும். இது ஆரோக்கியமாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும். இதற்கு மாறாக, தம்மையுமறியாமல் சிறுநீர் வெளியேறும் போது தான், சிறுநீரக பிரச்சினை ஆரம்பமாகின்றது.
இதனை, மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை ஓவர் எக்டிவ் பிளாடர் (Overactive bladder) அதாவது சிறுநீர்ப்பையின் அதீத செயல்பாடு. இது பாதிக்கும்போது உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உந்துதல் ஏற்படும். அடுத்தது ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ் (Stress urinary incontinence). மூன்றாவது ஓவர்ஃப்ளோ இன்கான்டினன்ஸ் (Overflow incontinence) என்பனவாகும்.
முதல் வகையில் சிறுநீர்ப்பையானது தன் இயல்பைத் தாண்டி அதிகமாக வேலை செய்யும். அதன் காரணமாக நாம் நினைப்பதற்கு முன்பே, நம்மையும் அறியாமல் சிறுநீர் வெளியேறும். இதனால் சிறுநீர்க் கசிவு ஏற்பட்டு, உடைகள் நனைந்து, வாடை அடித்து, ஒருவரை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளும். இந்தப் பிரச்சினைக்கான காரணம் கண்டறியப்பட்டு, மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தேவைப்பட்டால் கடைசி தீர்வாக அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுமாம்.
இரண்டாவது வகையில் சிரிக்கும்போது, இருமும்போது, தும்மும்போதெல்லாம் சிறுநீர்க் கசிவு ஏற்படும். ஒருகட்டத்தில் இந்தச் செயல்களைச் செய்யவே மனது பயப்படும். இந்த பிரச்சினையால், சிரிக்கவே தயங்கும் பெண்களும் இருக்கிறார்களாம்.
இதற்கு எளிய பயிற்சிகளே போதும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மருத்துவரிடம் அவற்றைக் கற்றுக்கொண்டு, வீட்டிலேயே தொடர்ந்து செய்து வந்தாலே மெல்ல மெல்ல இந்த பிரச்சினையிலிருந்து மீளலாம் என கூறுகின்றார்கள். தேவைப்பட்டால் சில மருந்துகளும் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுமாம். இந்தப் பிரச்சினையிலும் கடைசிகட்ட தீர்வாக எளிமையான அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கின்றார்கள்.
மூன்றாவது வகையான ஓவர்ஃப்ளோ இன்கான்டினன்ஸ் பிரச்சினைதான் சற்று அதிக கவனம் தேவைப்படுகிற ஒன்றாம். உதாரணமாக, ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பும் போது, அது நிரம்பியதும் தானாக வெளியே வழியும். அதுபோல் தான் இந்தப் பிரச்சினையும் என்கின்றார்கள்.
அதாவது, சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பியதும் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் சிறுநீர்க் கசிவு ஏற்படுவதையே இந்தப் பிரச்சினை குறிக்கின்றதாம். சிறுநீரகக் கற்கள் உள்ளனவா, தொற்று உள்ளதா, நரம்பியல் பிரச்சினையோ, வேறு ஏதேனும் பிரச்சினையோ உள்ளனவா என கண்டறிந்த பிறகே இதற்கு சிகிச்சை ஆரம்பிக்கப்படுமாம். இதற்கும் மருந்துகள், பிரத்தியேக சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.
இவற்றில் எந்த வகை பாதிப்பானாலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கப்பட வேண்டும். அலட்சியம் செய்வது சிறுநீரகங்களையே பாதிக்கும் அளவுக்குத் தீவிரமாகலாம். அது மட்டுமன்றி, இந்தப் பிரச்சினையோடு வாழ்வது என்பது இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். வெளியிடங்களுக்குச் செல்லவே பிடிக்காத அளவுக்கு ஒருவரை வீட்டுக்குள்ளேயே முடக்கும்.
எனவே இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது சாலச்சிறந்தது என்பது மருத்துவர்கள் நமக்கு சொல்லும் அறிவுரை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM