தனிநபர் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் பின்னரா எம்.பிக்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது? தனிநபர் பிரேரணையை முன்வைத்த ஹேசா விதானகே எம்.பி கேள்வி

09 May, 2025 | 08:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களின்  பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.  நாட்டில் தனிநபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தனிநபர் பாதுகாப்பை எவ்வாறுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற   அமர்வின்  போது   ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் ஹேசா விதானகே பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள்  மற்றும் அவர்களது பாரியார்கள்  அனுபவிக்கின்ற சிறப்புரிமைகளை பொருத்தமான வகையில் குறைத்தல் தொடர்பான பிரேரணையை  முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் பாரியார்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் மற்றும் விசேட சலுகைகளை முறையான வழிமுறைகளுக்கு அமைய  இரத்துச் செய்தல் அல்லது குறைத்தல் தொடர்பான தனிநபர்  பிரேரணையை முன்வைக்கிறேன்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் தொடர்பில் கடந்த  தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில்  மாறுப்பட்ட நிலைப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த  விடயத்துக்கு  வெளிப்படையான தீர்வை வழங்குவதாயின் அரசாங்கம் இதுவரையான காலப்பகுதியில் ஒரு தீர்மானத்தை எடுத்து அதனை அமுல்படுத்தியிருக்க வேண்டும்.

ஆட்சிக்கு    வந்து இரண்டு வார காலத்துக்குள் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும்  சிறப்பு சலுகைகளை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வாக்குறுதியளித்தது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8 தாங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வெளிப்படையான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறானதொரு  நிலைப்பாட்டை ஏற்படுத்திய அரசாங்கம்  மக்கள் மத்தியில் இனியாவது வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்  என்பததையே  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிட்ட பொய் அனைத்தும் இன்று மறக்கப்பட்டுள்ளது. அரசியல் வெற்றிக்காக இவ்வாறு பொய்யுரைக்க கூடாது.

வழங்கிய வாக்குறுதிகளை  அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின்  பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.  நாட்டில் தனிநபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.  சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அரசாங்கம் கன்னத்தில் அறைந்துள்ளது. இதற்கான பதிலடியையே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த தனிநபர் பிரேரணையின் உள்ளடக்கத்தை தேசிய மக்கள் சக்தி தான் சமூகமயப்படுத்தியது. ஆகவே இந்த பிரேரணையை அரசாங்கம்  முறையாக செயற்படுத்த வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக இடைநிறுத்தம் தீர்வைப்...

2025-05-21 02:37:24
news-image

காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு...

2025-05-21 02:32:19
news-image

மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த...

2025-05-21 02:22:18
news-image

இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின்...

2025-05-21 02:17:46
news-image

பிரதமருக்கும், வட-கிழக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

2025-05-20 23:44:10
news-image

இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகத்துக்கான விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ளது...

2025-05-20 15:39:03
news-image

எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார் நியூஸிலாந்து...

2025-05-20 21:48:32
news-image

சிப்பாய்கள் என விளித்து ஜனாதிபதி இராணுவ...

2025-05-20 20:56:19
news-image

யாழ். நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள...

2025-05-20 21:14:03
news-image

வடக்கு மக்களின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-05-20 16:03:34
news-image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

2025-05-20 23:16:49
news-image

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா...

2025-05-20 19:50:14