(பிரதாப் சரண்யா)
கொழும்பில் அமைந்துள்ள வன் கோல் பேஸ் வணிக வளாகத்தில் விளையாடி, உணவருந்தி மகிழ்ந்திட “பிளேடியம்” என்கிற பிரமாண்டமான பொழுதுபோக்கு உள்ளக அரங்கு வியாழக்கிழமை (08) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் பிரதான பங்காளர்கள், தொழில்துறை தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த “பிளேடியம்” பொழுதுபோக்கு உள்ளக அரங்கு ஏட்டம் டெக்னோலோஜிஸ் (Atom Technologies) மற்றும் டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (David Pieris Holdings) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பிளேடியம்” இலங்கையில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு உள்ளக அரங்காக காணப்படுகிறது.
இது குடும்பங்கள், இளைஞர்கள், நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட, மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குவதற்கேற்ற உலகத் தரம் வாய்ந்த இடமாக திகழ்கிறது.
“பிளேடியம்” வன் கோல் பேஸ் வணிக வளாகத்தில் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
அனைவரையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் விசேட அம்சங்களுடன் “பிளேடியம்” காணப்படுகிறது.
அத்துடன், சர்வதேச லீக் தர நிலைகளுக்கு அமைவான ஓடுதளங்களைக் கொண்ட புரூன்ஸ்விக் போலிங் (Brunswick Bowling) எனப்படும் பந்துவீச்சு அம்சம் சாதாரண மற்றும் அதி தீவிர ஆர்வமிக்க வீரர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கக்கூடும்.
அத்தோடு, இங்கு புத்தாக்கம் மற்றும் ஈடுபாட்டுடன் கூடியதுமான “விளையாட்டுக்குள் விளையாட்டு” எனப்படும் ஸ்பார்க் போலிங் (Spark Bowling) பந்துவீச்சு முறை இலங்கையில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிளேடியம் தெற்காசியாவிலேயே முதல் தடவையாக ஹோலோகேட் வேர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை (Hologate Virtual Reality system) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பல வீரர்கள் சேர்ந்து விளையாடும், விருது பெற்ற மல்டிபிளேயர் வி.ஆர் (Multiplayer VR) விளையாட்டை கொழும்புக்கு கொண்டுவந்துள்ளது.
இதனுடன் இணைந்த ஆர்கேட் அரினா (Arcade Arena), சேகா SEGA வீடியோ விளையாட்டுக்கள் மற்றும் செல்லா பம்பர்கார்கள், கரோக்கி பொழுதுபோக்கு அறைகள் மற்றும் சிறுவர்களுக்கான மென்மையான விளையாட்டுத் திடல் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
இதன் மூலம் அனைத்து வயதினரும் குதூகலமான அனுபவங்களை பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.
பிளேடியத்துக்கு வருவோர் உணவு, தேநீர் பானங்களை உட்கொள்வதற்காக சம்பியன்ஸ் டேபிள் ஸ்போர்ட்ஸ் பார் (Bar), கெபே (Cafe) போன்றவற்றை டேஸ்டி கேட்டர்ஸ் (Tasty Caterers) உணவகம் நடத்தி வருகிறது.
இதன் மூலம் ஓய்வான, உற்சாகமான வேளைகளில் நேரலை விளையாட்டுப் போட்டித் திரையிடல்களை பார்வையிடும்போது உணவு, பானங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
விளையாட்டுக்களில் பங்கேற்று முடிந்த பின்னர், உணவு உட்கொள்ளும்போதோ அல்லது இரவு நேரத்தில் வெளியில் செல்லும் வழக்கமான தருணத்திலோ சம்பியன்ஸ் டேபிளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விளையாட்டு அம்சங்களைத் தவிர, நிறுவனங்களின் நிகழ்வுகள், வெளியீட்டு விழாக்கள், தனியார் விருந்துபசாரங்கள், அமர்வுகள் போன்றவற்றையும் பிளேடியம் என்கிற ஒரே கூரையின் கீழ் நிகழ்த்தக்கூடிய வசதிகள் இங்கு காணப்படுவதால், அவ்வாறான நிகழ்வுகளிலும் பங்கேற்று சிறப்பான அனுபவங்களை பெற முடியும்.
இது தொடர்பாக பிளேடியத்தின் பணிப்பாளர் அஷான் டி லிவேரா கூறுகையில்,
இலங்கையின் பொழுதுபோக்கு சார்ந்த துறையை அடுத்த கட்டத்திற்கு பிளேடியம் கொண்டு செல்கிறது. இது வெறுமனே விளையாட்டுக்களைப் பற்றிய விடயம் மாத்திரமல்ல. இது நினைவுகளை தோற்றுவிக்கக்கூடிய, மகிழ்ச்சியை உண்டாக்கக்கூடிய மற்றும் பகிரப்பட்ட அனுபவங்களினூடாக மனிதர்கள் ஒன்றிணையும் ஓர் இலக்கை அடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது பற்றியதொரு விடயமாகும்.
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடனான இந்த கூட்டு செயற்பாடானது, பொழுதுபோக்கு என்பது என்னென்ன விடயங்களாக காணப்படுகிறது என்பதற்கான தரத்தை உயர்த்துவதில் எமது பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார்.
ஷங்க்ரி லா குழுமத்தின் ஓர் அங்கமான வன் கோல் பேஸ் வணிக வளாகத்தின் பொது முகாமையாளர் சச்சின் தனவத்தே தெரிவிக்கையில்,
ஷங்க்ரி லா குழுமத்தின் ஓர் அங்கமான வன் கோல் பேஸ் வணிக வளாகமானது, மக்களை ஒன்றிணைக்கும் வணிகம், விருந்துபசாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் துடிப்பான கலவையை உருவாக்குவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
பிளேடியம் ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் குதூகல வினோத செயற்பாடுகளில் ஆர்வமுடையவர்களுக்கு வண்ணமயமான மகிழ்ச்சியையும், நீடித்த நினைவுகளையும் உருவாக்குவதற்கு ஒரு புதிய வாய்ப்பினை வழங்கத்தக்க விதத்தில் இலங்கையின் பொழுதுபோக்கு வனப்பினை விரிவுபடுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
எட்டம் டெக்னோலோஜிஸ் நிறுவனத்துடனான இந்த பங்காளித்துவமானது, உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை கொழும்பு நகரிலேயே வழங்குவதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM