தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக- மாயாஜாலம் செய்யும் மந்திரவாதியாக நடித்திருக்கும் 'ஜோரா கைய தட்டுங்க' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் வினிஷ் மில்லேனியம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜோரா கைய தட்டுங்க 'எனும் திரைப்படத்தில் யோகி பாபு, 'அருவி 'பாலா, ஹரிஷ் பெராடி, சாந்தி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். அருணகிரி- ஜித்தின் கே. ரோஷன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாமா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜாகீர் அலி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக் குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கு பெற்று படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இவ்விழாவில் பங்கு பற்றி கதாநாயகன் யோகி பாபு பேசுகையில், '' பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பிரஜின் ஹீரோவாக நடித்த 'தீக்குளிக்கும் பச்சை மரம்' எனும் திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தேன். அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் வினிஷ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எம்மை தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை விவரித்தார். கதை எனக்கு பிடித்திருந்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்தை படக் குழுவினர் கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் எஸ். தாணு மற்றும் தனஞ்ஜெயன் ஆகியோர் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விரும்புகிறேன் . என் சம்பளத்தை நான் தீர்மானிப்பதில்லை. மற்றவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். பேசும் சம்பளத்தை கூட இங்கு யாரும் முழுதாக தருவதில்லை. இதுதான் யதார்த்தமான உண்மை. பேசுபவர்கள் பேசட்டும். அவர்கள் அனைவரையும் கடவுள் பார்த்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை நான் அனைவருக்கும் ஆதரவாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM