சின்னத்திரை தொகுப்பாளர்- நகைச்சுவை நடிகர் - குணச்சித்திர நடிகர் - சமூக செயற்பாட்டாளர் - சோசியல் மீடியா இன்புளூயன்சர் என பன்முக திறமையுடன் இளம் தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரண நட்சத்திரமாக திகழும் கே.பி.வை.பாலா, இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
'ரணம் -அறம் தவறேல்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் நமீதா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெய் கிரண் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் ஃபீல் குட் எமோஷனல் டிராமாவாக தயாராகி இரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்'' என்றார்.
இதனிடையே நகைச்சுவை நடிகர்களாக பிரபலமாகி கதையின் நாயகர்களாக உயர்ந்த வைகைப்புயல் வடிவேலு - விவேக் - சந்தானம் - சூரி - யோகி பாபு ஆகியோரின் வரிசையில் கே.பி.வை பாலாவும் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM