இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து இன்று வெள்ளிய்கிகழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், மாதுரு ஓயா இராணுவ விசேட படைதளத்தில் இருந்து விசேட படைப்பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் ஒரு விளக்கப் பயிற்சியை காண்பிக்க ஆறு விசேட படை வீரர்களுடன் பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட 12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அரலகங்வில அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு (Air Gunners) வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விமானப்படைத் தளபதி தலைமையிலான 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM