அமெரிக்காவிலிருந்து தெரிவான முதல் பாப்பரசர் இவர் ஆவார்.
பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர் ( 14 ஆம் லியோ ) வின் இயற்பெயர் ரொபர்ட் பிரான்சிஸ் பிரெவஸ்ட் ஆகும்.
1955 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி சிக்காக்கோவில் பிறந்தார்.
இவரது தந்தையின் பெயர் லூயி மாரியஸ் பிரெவஸ்ட், தாயாரின் பெயர் மில்ட்ரெட் மார்டினெஸ் ஆகும்.
இவர் தனது சிறுவயதில் சிக்காக்கோவிலுள்ள விண்ணேற்ப்பு அன்னை ஆலயத்தில் பீடப்பணியாளராக பணியாற்றினார்.
1973இல் புனித ஆகுஸ்தினார் துறவர சபையின் சிறிய குருமடத்தில் தன்னுடைய உயர்நிலை கல்வியை முடித்தார்.
1977இல் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டப்படிப்பை (B.Sc.) பெற்றார்.
இவர் ஜூன் மாதம் 19 ஆம் திகதி 1982 ஆம் ஆண்டு அருட்பணியாளராக திருநிலை படுத்தப்பட்டார்.
புதிய ஆகுஸ்தீனார் சபையில் துறவியாக இணைந்து, அவரது ஆரம்ப கால பணியை பெரு நாட்டில் ஆற்றினார்.
1985–1986 மற்றும் 1988–1998 காலப்பாகுதிகளில் பெரு நாட்டில் பங்கு தந்தையாகவும் , மறைமாவட்ட அதிகாரியாகவும் , குருமட ஆசிரியராகவும் ,நிர்வாகியாகவும் பணியாற்றினார் .
2001 முதல் 2013 வரை ஆகுஸ்தீனார் துறவர சபை தலைவராகவும் பணியாற்றினார் .
இவர் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார்.
2015 முதல் 2023 வரை பெரு நாட்டின் சிக்லாயோ மறைமாவட்டத்தில் ஆயராகவும் பணியாற்றினார்.
இவர் 2023இல் மறைந்த பாப்பரசர் பிரான்சினால் கர்த்தினாலாக நியமிக்கப்பட்டார்.
இவர் ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீஸ் மொழிகளில் பேசக்கூடியவரும், லத்தீன் மற்றும் ஜேர்மன் மொழிகளை வாசிக்கக்கூடியவருமாவார்.
பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி புதிய பாப்பரசராக தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM