ஜம்முவில் உள்ள அக்னூர் உள்ளிட்ட பகுதியில் டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய வான் பாதுகாப்பு வலயங்களை டிரோன்களை இடைமறித்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஒப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. வியாழக்கிழமை (8) அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய இராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு வலயங்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்முவின் அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன்களை இந்திய இராணுவம் இடைமறித்து அழித்து வருகிறது.
டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது. Blackout என அழைக்கப்படும், மின்சாரம் தடை செய்யப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM