நாவலப்பிட்டி, கலபொட பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் திறப்பு விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாவலப்பிட்டி பங்குதந்தை சிசில் சேவியர் அடிகளாரின் அதீத முயற்சியில் கட்டப்பட்ட இந்த புனித ஆலயம், கண்டி மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோவால் திறந்து வைக்கப்பட உள்ளது.
இதன்போது ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோவால் ஆலயம் ஆசிர்வதிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த புனித நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நாவலப்பிட்டி பங்குதந்தை சிசில் சேவியர் அடிகளார் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்த ஆலயத்தை கட்ட உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பங்குத் தந்தை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் ஆசிக்காக மன்றாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM