இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் பொருளாதாரத் தேவை என்பது நாளுக்கு நாள் வெவ்வேறு அளவுகளில் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பான கவலை அவர்களை ஆக்கிரமித்துக் கொள்ள, தங்களிடம் உள்ள மனித வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலாத சூழலுக்கு தங்களை அமிழ்த்தி கொள்கிறார்கள்.
இந்நிலையில் பொருளாதாரம்- தன வரவு - என்பது குருவை குறிப்பது. அதாவது பெருஞ்செல்வத்தை குறிப்பது குரு. இதனால் குரு வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது பெருந்தனம் கிடைத்து எம்முடைய பொருளாதார வரம் மேம்படுவதுடன் வருவாய் குறையாமல் உயரக்கூடும்.
குரு வழிபாடு என்பது எம்மில் அனைவரும் நாளாந்தம் மேற்கொள்வது தான். இதில் என்ன சூட்சமம் என்றால், உங்களது ஜாதகத்தில் குரு பகவான் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் அல்லது எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறாரோ, அந்த நட்சத்திரம் எங்கு தீவிரமாக இயங்குகிறதோ, அந்த நிலவியல் பகுதிகளுக்கு வியாழக்கிழமைகளில் சென்று வருவதன் மூலம் உங்களுடைய தன வருவாயை உயர்த்திக் கொள்ளலாம்.
அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையன்று உங்களுடைய ஜாதகத்தில் குரு எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ.. அந்த நட்சத்திரத்திற்கான ஆற்றல் நிரம்பிய ஆலயத்திற்கு சென்று சுக்கிர ஹோரை அல்லது குரு ஹோரையில்.. குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கினால்.. உங்களுடைய பெருந்தனம் எனும் அதீத தன வரவு கிடைக்கும்.
உடனே எம்மில் சிலர் இத்தகைய வழிபாட்டை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் முன்னேற்றம் இல்லை என மனதளவில் நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் முதலில் தங்களுடைய கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றால், தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் நூறு ஆண்டு பழைமை வாய்ந்த வில்வ மரத்தை நாளாந்தம் விடியல் காலையில் அல்லது அதிகாலையில் 21 முறை வலம் வந்து 'மாற்றம் வேண்டும் முன்னேற்றம் வேண்டும்' என கோரிக்கையை சமர்ப்பித்தால், உங்களால் தடையின்றி குரு நட்சத்திர வழிபாட்டை மேற்கொள்ள இயலும். அதனூடாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அதீத தனவரவு கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM