பான் ஏசியா வங்கியானது, அதன் மிகச் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் புத்தாக்க நோக்கில் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் விதமாக, 2024 ஆம் ஆண்டுக்கான “சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன” விருதளிப்பு விழாவில் மூன்று பெருமைமிக்க விருதுகளை வென்றுள்ளது.
இவ்விருதுகள் இலங்கையில் பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனம் (Chartered Professional Managers – CPM) மூலம் வழங்கப்பட்டன.
இந்த விருதுகள் வாயிலாக பான் ஏசியா வங்கி, “சிறந்த 20 நிறுவனங்களில்” ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், “டிஜிட்டல் எழுத்தறிவு”பிரிவில் வெள்ளி விருதையும், “மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வங்கி (தனியார் துறை) பிரிவில் தகுதிகாண் விருதையும் வென்றுள்ளது.
வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க கருத்து தெரிவிக்கையில்,
"CPM இன் இந்த அங்கீகாரத்தால் நாம் உண்மையிலேயே கௌரவிக்கப் படுகிறோம். இந்த விருதுகள் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்மைகளைகொண்ட புதுமையான மற்றும் பொறுப்பான வங்கி தீர்வுகளை வழங்க எமது முழு குழுவினரும் மேற்கொண்ட கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன." என்றார்.
இந்த விருதுகள் பான் ஏசியா வங்கியின் சிறந்த பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக அமைவதுடன் ஆற்றல்மிக்க மற்றும் டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற வங்கி என்ற அதன் நற்பெயரை வலுப்படுத்துகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM