வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்

Published By: Vishnu

07 May, 2025 | 08:08 PM
image

ஆர்.ராம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன குறிப்பிடத்தக்க சில சபைகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட ரீதியான முடிவுகளைப் பார்க்கையில்,

யாழ்.தேர்தல் மாவட்டம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காணப்படும் 17 உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி யாழ்.மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலனை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரேதச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய 12சபைகளில் முதன்மை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகிய இரண்டு சபைகளில் முதன்மை பெற்றுள்ளதோடு ஈ.பி.டி.பி காங்கேசன்துறை பிரேதச சபையில் மாத்திரம் முதன்மை பெற்றுள்ளது.

இதேநேரம், காரைநகர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, சுயேட்சைக்குழு ஆகியன தலா 2 ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

மேலும் சாவகச்சேரி நகரசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன தலா அறு ஆசனங்களைப் பெற்று சமநிலையில் இருப்பதோடு தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இரண்டு ஆசனங்களையும், ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்

கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ள அதேவேளை, கரைச்சி, பூநகரி ஆகியவற்றில் அக்கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதனால் அவ்விரு சபைகளிலும் தமிழரசுக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவுள்ளதோடு, பச்சிலைப்பள்ளி பிரேச சபையில் இரண்டாவது அதிக ஆசனங்களைக் கொண்டிருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் தேர்தல் மாவட்டம்

மன்னார் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளுராட்சி மன்றங்களில் மன்னார் மாநகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கைத் தமிழரசுக்கட்சி முதன்மை பெற்றுள்ளது. எனினும் இம்மூன்று சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு அக்கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் ஆட்சியை அமைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களை பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முசலி பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தியயும், நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியும் முதன்மை பெற்றுள்ளபோதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சிகள் கொண்டிருக்கவில்;லை. இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் கட்சி, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்புகள் ஆட்சி அமைப்பதற்கு தேவையாக உள்ளன.

நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வேறெந்த தரப்புடனும் ஒன்றிணையாத பட்சத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு தேர்தல் மாவட்டம்

முல்லைத்தீவு தேர்தல் மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அறுதிப்பெரும்பான்மையை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்டுள்ளதோடு ஏனைய மூன்று சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களைப் பெற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தேர்தல் மாவட்டம்

வவுனியா தேர்தல் மாவட்டத்தில் வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, இலங்கைத் தொழிலாளர் கட்சி ஆகியன தலா நான்கு ஆசனங்களைப் பெற்று சமநிலையில் உள்ளதோடு தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலையில் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களுடன் மூன்றாம் நிலையிலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாய தேசியக் கூட்டணி, சுயேட்சைக்குழு ஒன்று, இரண்டு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொண்டுள்ளன.

இதேநேரம், வவுனியா வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளபோதும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 5 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4ஆசனங்களையும்,  ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி 3ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் கொண்டுள்ளதோடு  சர்வஜன சக்தி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 4ஆசனங்களையும்  இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய தலா மூன்று ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி ஜனநாயக தேசியக்கூட்டணி இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா 2ஆசனங்களையும்  இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், சுயேட்சைக்குழு 2 ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 5 ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஜனநாயக தேசியக்கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா இரண்டு ஆசனங்னகளையும்  தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சர்வஜன சக்தி, சுயேட்சைக்குழு 2, சுயேட்சைக்குழு 3 ஆகியன தலா ஒவ்வொரு ஆனசங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேச சபையில், தேசிய மக்கள் சக்தி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 4ஆசனங்களையும்  சுயேட்சைக்குழு 2 இரண்டு ஆசனங்களையும் 2 இலங்கை தொழிலாளர் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, சர்வஜன சக்தி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

அந்தவகையில் வவுனியா தேர்தல் மாவட்டத்தில் உள்ள எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்திலும் ஆட்சியை அமைத்துக்கொள்வதில் ஆகக்குறைந்தது மூன்றுக்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றிணைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்குள் மீண்டும் இனவாதத்தை தூண்ட வேண்டாம்...

2026-01-18 19:21:04
news-image

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் 21ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில்...

2026-01-18 17:25:12
news-image

“வாழ்நாள் சாதனையாளர் விருது” பெறும் 5...

2026-01-18 19:11:24
news-image

அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ...

2026-01-18 19:15:36
news-image

கசிப்பு வியாபாரியை கைதுசெய்யச் சென்ற பொலிஸாரை...

2026-01-18 18:40:51
news-image

யாழில் போதைப்பொருளை விற்க முயன்ற இரு...

2026-01-18 18:26:42
news-image

மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார்...

2026-01-18 18:19:28
news-image

2025 நவம்பருக்குள் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்...

2026-01-18 17:58:32
news-image

நாட்டில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தவும் தடுக்கவுமான...

2026-01-18 18:14:12
news-image

யாழில் கோர விபத்து - ஒருவர்...

2026-01-18 17:47:20
news-image

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்...

2026-01-18 18:05:04
news-image

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான...

2026-01-18 16:52:59