இன்றைய திகதியில் எம்மில் பலரும் கடினமாக உழைத்து சேகரித்த செல்வ வளத்தை சேமிக்கவே விரும்புவார்கள். மேலும் சேமிப்பிலிருந்து செலவு செய்வதற்கும் நிறைய யோசிப்பார்கள்.
ஆனால் சிக்கலான தருணத்தில் செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்ளவே அனைவரும் விரும்புவார்கள். இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வாழ்க்கையில் சில சூட்சமமான வாழ்வியல் முறையை தொடர்ந்து மேற்கொண்டால் செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : மருதாணி, பிங்க் வண்ண கண்ணாடி வளையல் மற்றும் பல வண்ண வளையல்கள்.
இளம் பெண்கள் மற்றும் பெண்மணிகள் தங்களுடைய கைகளில் எப்போதும் மருதாணியை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஏனெனில் மருதாணி என்பது மகாலட்சுமியின் அம்சம். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி எம்முடன் எப்போதும் தங்கி இருப்பதற்கு பெண்மணிகள் தங்களது இரு கைகளில் மருதாணியை பூசிக் கொள்ள வேண்டும்.
அத்துடன் மருதாணி செடி வளரும் இடங்களில் மகாலட்சுமியின் சூட்சம ஆற்றல் நிறைந்திருக்கும். அதே தருணத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலை சுக்ர ஹோரையில் பெண்கள் நீராடிய பிறகு பிங்க் வண்ண கண்ணாடி வளையல் அல்லது உங்களுக்கு விருப்பமான வண்ணம் கொண்ட கண்ணாடி வளையல்களை அணிந்திருக்க வேண்டும். இந்த கண்ணாடி வளையல்களின் ஓசை செல்வ வளத்தை வசியம் செய்யும் ஒலி ஆற்றலை பெற்றிருக்கிறது.
இளம் பெண்கள் மற்றும் பெண்மணிகள் வெள்ளிக்கிழமைகளில் நீராடி சந்தனம் பூசிக்கொண்டு, மருதாணி மற்றும் கண்ணாடி வளையலை அணிந்து மகாலட்சுமியின் மந்திரத்தை மனதில் தியானித்தால் செல்வ வளம் குவியும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM