இன்றைய திகதியில் எம்முடைய இளம் தம்பதிகளுக்கு பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் இரண்டு மாதத்தை கடந்த பிறகு காரணமே இல்லாமல் அதிக அளவில் அழத் தொடங்கும்.
இது பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை சமாதானப்படுத்த தெரியாமல் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியரிடம் காண்பித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
இத்தகைய அழுகை பாதிப்பிற்கு மருத்துவ முறையில் காலிக் ( Colic baby crying) என குறிப்பிடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் பிறந்து இரண்டு மாதமான நிலையில் அவர்கள் தாய்ப்பாலை ஆரோக்கிய உணவாக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில் சில தாய்மார்கள் தாய்ப்பாலையும், பால்மா பவுடரையும் இணைந்து வழங்க தொடங்குகிறார்கள்.
இந்நிலையில் சில பிள்ளைகள் மாலை நேரத்தில் திடீரென்று அழத்தொடங்கும். சில தருணங்களில் இத்தகைய அழுகை மூன்று மணி தியாலம் வரை கூட நீடிக்கும். இத்தகைய தருணங்களில் பிள்ளைகளின் அழுகைகளை அடக்க தெரியாமல் பெற்றோர்களும் திணறுவார்கள்.
சில பிள்ளைகள் வலியில் துடிப்பது போல் அழுவார்கள். சில தருணத்தில் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் அழத் தொடங்குவார்கள்.
செரிமான மண்டலத்தில் ஏற்படும் குறைபாடு காரணமாகவே குழந்தைகள் அழுகிறார்கள். இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்த ஆய்வினை மேற்கொள்வார்கள்.
இதனுடன் செரிமான மண்டல தொடர்பான குறைபாடுகளுக்கும் ஒவ்வாமை குறைபாடுகளுக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள். அதன் பிறகு குழந்தை அழுவதை குறைத்து சிரிக்கத் தொடங்கும்.
வைத்தியர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM