கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 4 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை

Published By: Digital Desk 2

07 May, 2025 | 04:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களிலும்  ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி அதிக வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டியுள்ளது. இதில் 9 உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு ஆட்சியை உறுதிப்படுத்திக்கொண்டுள்ள போதும் 4 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபையை ஆளும் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டிக்கொண்டுள்ளது. என்றாலும் அவர்களுக்கு அதில் 48 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளபோதும்  கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 69 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் கொழும்பு மாநகர சபையில் தனித்து ஆட்சியை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு முடியாமல் இருக்கிறது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரசபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது. அதில் அவர்களுக்கு 9ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளபோதும் எதிர்க்கட்சிகளுக்கு 10 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் அங்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கபுர நகரசபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது. அதில் அவர்களுக்கு 11 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதும் எதிர்க்கட்சிகளுக்கு 14ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் இங்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது. அவர்களுக்கு 26 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் மொத்தமாக 26 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் மொரட்டுவை மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-17 06:16:30
news-image

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு!

2025-06-17 01:48:46
news-image

பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக நாங்கள்...

2025-06-16 23:32:40
news-image

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2025-06-16 21:38:20
news-image

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் -...

2025-06-16 21:11:29
news-image

மத்திய கிழக்கில் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு...

2025-06-16 20:58:50
news-image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவையும் செயலிழக்கச்...

2025-06-16 17:21:34
news-image

உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ள...

2025-06-16 18:29:37
news-image

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

2025-06-16 19:20:26
news-image

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து

2025-06-16 19:18:43
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள்...

2025-06-16 19:04:06
news-image

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச்...

2025-06-16 18:58:49