பாணந்துறை - ஹிரண பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பாதாள உலக கும்பல் தலைவரின் சகாக்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திங்கட்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு - கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனியன் பிளேஸில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மருதானை மற்றும் கொழும்பு 13 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை - ஹிரண பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிகளுக்கு துப்பாக்கி மற்றும் வேன் வழங்கி உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனிவீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM