• நிறுவனத்தின் வருடத்திற்கான மொத்த உரிமைகோரல் கொடுப்பனவு ரூபா 10.5 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
• முழுமையாக எழுதப்பட்ட தவணைக்கட்டணம் ரூபா 25 பில்லியனாகப் பதிவுசெய்துள்ளது.
• வரிவிதிப்புக்கு முன்னராக இலாபமாக ரூபா 4 பில்லியன்
• ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டார் பிளஸ் மோட்டார் காப்புறுதித் துறையில் முதலாவது ஸ்தானத்தை தன்வசம் வைத்துள்ளது.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் 2024ஆம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதுடன், காப்புறுதித்துறை சந்தையின் முன்னணியாளர் என்ற ரீதியில் தனது பலத்தையும், விரிவாற்றலையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது.
SLICGL நிலையான நிதி ஸ்திரத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வரிவிதிப்புக்கு முன்னராக இலாபமாக ரூபா 4 பில்லியனைப் பதிவுசெய்திருப்பதுடன், வரிவிதிப்புக்குப் பின்னரான இலாபமாக ரூபா 3.3 பில்லியனைப் பதிவுசெய்துள்ளது. 2024 டிசம்பர் 31ஆம் திகதியின் போது நிறுவனம் எழுதப்பட்ட தவணைக் கட்டணமாக ரூபா 25 பில்லியன் பதிவாகியிருப்பதுடன், அதன் சொத்து மதிப்பு ரூபா 51 பில்லியனாக விரிவாக்கப்பட்டிருப்பதன் மூலம் நிதிநிலைமை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் காப்புறுதிப் பிரிவில் ஸ்ரீ லங்கா மோட்டார் பிளஸ் காப்புறுதி 20% சந்தைப் பங்கை உறுதிப்படுத்தி ரூபா 14 பில்லியனைத் தவணைக் கட்டண வருமானமாகப் பெற்றிருப்பதுடன், இலங்கையின் முதல் தரமான மோட்டார் காப்புறுதி வழங்குனர் என்ற தனது ஸ்தானத்தைத் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் நிலைநிறுத்தியுள்ளது.
அதேநேரம், மோட்டார் அல்லாத பிரிவு தவணைக் கட்டண வருமானமாக ரூபா 11 பில்லியன் என்ற இலக்கை அடைந்திருப்பதுடன், 15% வளர்ச்சியைப் பதிவுசெய்து, இது இந்தப் பிரிவில் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம் 9 % வளர்ச்சியைப் பதிவு செய்து, 19.4% சந்தைப் பங்கைக் கொண்டு சந்தையின் முன்னோடியாகத் திகழ்கின்றது.
இது, தொழில்துறையின் சராசரியை விஞ்சும் வகையில் அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் பரந்துபட்ட காப்புறுதித் தயாரிப்புக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை என்பவற்றின் சிறப்பை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM