இன்றைய சூழலில் எம்மில் பலரும் மூளை மற்றும் தண்டுவட பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நிவாரணமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்தால் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதில்லை.
ஏனெனில் சத்திர சிகிச்சைக்கு பிறகு நிவாரணம் கிடைப்பதில் பாரிய அசௌகரியம் அல்லது பாரதூரமான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமே காரணம்.
இந்த தருணத்தில் மூளை மற்றும் தண்டுவட பகுதிகள் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எத்தகைய பக்க விளைவுகளும் ஏற்படாத வகையில் முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை கருவி அறிமுகமாகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த தருணத்தில் ஓ ஆர்ம் எனும் நவீன சத்திர சிகிச்சை கருவி மூலம் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோயாளிகளுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.
இந்த கருவியுடன் சிடி ஸ்கேன் கருவியும் இணைக்கப்பட்டிருப்பதாலும் , முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய புகைப்படங்கள் கிடைக்கக்கூடிய வசதிகள் இருப்பதாலும், சத்திர சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ள இயலும்.
பக்க விளைவுகளும் ஏற்படாத வகையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும். சத்திர சிகிச்சைக்கு பிறகு குறிப்பிட்ட பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதையும் ஸ்கேன் மூலம் துல்லியமாக கண்டறிய இயலும். றொபாடிக் முறையில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதால் சத்திர சிகிச்சையின் வெற்றி வீதமும் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் பாலமுரளி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM