இந்தியாவில், 16,500 அடி உயரத்தில் காணப்படும் ஒரு ஏரியில், நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் நிறைந்துள்ளன. இதனை எலும்புக்கூடுகளின் ஏரி என்றே அழைக்கின்றார்கள். இருப்பினும், இந்த எலுக்கூடுகள், எப்படி அங்கு வந்தன, என்ன காரணம் என, இந்த ஏரி பற்றி எந்தவிதமான உறுதியான தகவல்களும் இல்லை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முற்றிலும் எலும்பு கூடுகளால் நிறைந்துள்ளது ரூப்குண்ட் ஏரி. இதுவே, எலும்புக்கூடு ஏரி என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 5,029 மீட்டர் உயரத்தில், கர்வால் மலைகளுக்கு அருகில் திரிசூல் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இது, இந்தியாவின் உயரமான ஏரிகளில் ஒன்றாகும்.
மற்ற சாதாரண ஏரிகளைப்போல அல்லாமல் இந்த ஏரி, நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகளால் நிரம்பி இருப்பது இன்றளவும் மர்மமாகவே பார்க்கப்படுகிறது. 1942இல் இந்திய வன அதிகாரியான எச்.கே.மத்வால் என்பவர், ரூப்குண்ட் ஏரி மற்றும் அதைச் சுற்றி பதுக்கி கிடந்த நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளைக் கண்டார். இருப்பினும், இது யாருடையது என்பதற்கான சரியான காரணம் இன்று வரை கிடைக்கவில்லை. மாறாக இந்த இடம் ஒரு மிகப்பெரிய சுற்றுலா தரிப்பிடமாக இப்போது மாறி இருக்கிறது.
ஆண்டு முழுவதும் உறைந்து கிடக்கும் இந்த ஏரி, விரிவடைந்து சுருங்கினாலும் பனி உருகும்போது மட்டுமே எலும்புக்கூடுகள் தெரியும். சில நேரங்களில் எலும்புக் கூடுகள் இணைக்கப்பட்டு நன்கு ஒட்டிக்கொண்டு இருக்கும். இன்றுவரை, 600-800 பேரின் எலும்புக்கூடுகள் இங்கு இணைக்கப்பட்டு நன்கு ஒட்டிக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுளது. உள்ளூர் அரசாங்கம் இதை "மர்ம ஏரி" என்று விவரிக்கிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மானுடவியலாளர்களும் விஞ்ஞானிகளும் எச்சங்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில், 870 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இந்திய அரசர், அவரது மனைவி மற்றும் அவர்களது உதவியாளர்கள் அனைவரும் இடம் பெயரும்போது, பனிப்புயலில் சிக்கி இறந்ததாக கிடைக்கும் தகவல் மட்டுமே மிச்சம்.
மேலும், பெரும்பாலானோர், 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அனைவரும் சராசரி உயரத்தை விட அதிகம் எனவும் மரபணு ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதையும் அவர்களின் இறப்புகள் ஆயிரம் ஆண்டுகள் வரை பிரிக்கப்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். இதில் குழந்தைகள் இல்லை என்பது ஆச்சரியப்படக்கூடிய தகவல்.
நாளடைவில் உலகம் முழுக்க பிரபலமான இந்த எலும்புக்கூடு ஏரியை பார்க்க, உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்ட்டிற்கு வர ஆரம்பித்தனர். அதனால் அரசாங்கமே இதனை சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த ஏரியின் ஆழம், வெறும் ஒன்பது அடி மட்டுமே. சமீபத்தில் இந்த ஏரியை பார்வையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், இந்த ஏரியின் அளவு சுருங்கி வருவதாகவும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM