உலகிலேயே முதல் நெட்வொர்க்கிங் மற்றும் சேவை அமைப்பான ரோட்டரி, இலங்கையின் ரோட்டேரியன்கள் மற்றும் ரோட்டரக்டர்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யும் ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் போட்டியின் 20வது ஆண்டுக்கான போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கண்டி நிட்டவெல ரக்பி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டி நிகழ்வை இலங்கை மற்றும் மாலைத்தீவு ரோட்டரி ஆளுநர் சுஷேனா ரணதுங்க தலைமைதாங்கவுள்ளார்.
இந்த போட்டி கண்டி ரோட்டரி கிளப் மூலம் ஏற்பாடு செய்யப்படுவதோடு ஸூர்யா பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் புகழ்பெற்ற சன் மேட்ச் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
நிறுவனரும் தொழில் முனைவோரும், தொழில் நபருமான மறைந்த டி.ஆர்.ஆர். ராஜனுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
மறைந்த டி.ஆர்.ஆர். ராஜன், கண்டி ரோட்டரி கிளப்பின் 51வது தலைவர் ஆவார். TRR என பிரபலமாக அறியப்படும் இவர் ஒரு பன்முக திறமைமிக்க விளையாட்டு வீரர், விளையாட்டு ஆதரவாளர், தானதரிசி மற்றும் உயரிய பண்பாட்டின் மனிதர் ஆவார்.
1992ஆம் ஆண்டு விளம்பர ஆதரவுக்கு முதன்முதலில் களத்தில் இறங்கியவர் இவரே. கண்டி விளையாட்டு கிளப் ரக்பி அணிக்கு அவர் ஆதரவளித்ததில், அவர்கள் கிளிஃபோர்டு கிண்ணத்தை வென்றனர்.
பின்னர், அவர் ஓல்ட் ட்ரினிடியன்ஸ் விளையாட்டு கிளப் ரக்பி அணிக்கும் ஆதரவளித்தார். அவரது தந்தையான பி.டி. ராஜன் கண்டியில் ஹாக்கியை மீண்டும் அறிமுகப்படுத்தியவராகவும் விளங்குகிறார். TRRஇன் சிறந்த முயற்சிகளை தற்போது அவரது சகோதரரான பி.டி.ஆர். ராஜன் (நண்பர்கள் 'சூரி' என்று அழைப்பர்), கடந்த கால ரோட்டரி ஆளுநர், தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த போட்டி தொடர்பில் தற்போதைய கண்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் டாக்டர் அவந்தி கருணாரத்ன கூறியதாவது:
“இந்த நிகழ்வு 1000க்கும் மேற்பட்ட ரோட்டேரியன்கள் மற்றும் ரோட்டரக்டர்களை இணைத்து நட்பு மற்றும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். வணிகத்தின் முடிவில் எல்லாமே உறவுகள் என்பதைத்தான் இது நம்மிடம் நினைவூட்டுகிறது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM