ஜனநாயக ரீதியான, அமைதியான தேர்தலுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம் - சஜித் பிரேமதாச

06 May, 2025 | 02:13 PM
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனநாயக ரீதியாகவும் அமைதியான முறையிலும் நீதி நியாயமாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தல் மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிட்டட்டும்.  கிராமங்களினதும் நகரங்களினதும் அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்க இந்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை ஆரம்பமான நிலையில், சஜித் பிரேமதாச இன்று காலை ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும், நீதி நியாயமாகவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக இது அமையும். சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க சந்தர்ப்பம் கிட்ட வேண்டும்.  கிராமங்களினதும் நகரங்களினதும் அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்க இந்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று கிராமங்களைக் கட்டியெழுப்பி, நகரங்களைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் செய்தியை சரியான நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளோம்.

தீர்மானம் எடுக்க வேண்டியது மக்களே. எனவே, சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனநாயகம் மிக்க தேர்தலுக்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். மக்கள் எடுக்கும்  முடிவுக்கு சகலரும் மதிப்பளிக்க வேண்டும். தேர்தல் சட்டங்களை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஜனநாயகத்தை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை...

2025-06-17 20:01:32
news-image

ஒருகொடவத்தையில் தீ விபத்து

2025-06-17 19:57:42
news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12