இன்றைய திகதியில் நாம் உழைப்பாளியாக இருந்தாலும் அல்லது உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பவராக இருந்தாலும் உயிருடன் இருப்பதற்கு கவனம் செலுத்துவது போல், எம்மை தற்காத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
எம்மை தற்காத்துக் கொள்ள தவறிவிட்டால், யார் வேண்டுமானாலும் துஷ்ட சக்திகளின் மூலம் எம்மை கட்டுப்படுத்தலாம். எனவே மற்றவர்களின் கெட்ட சக்தியிலிருந்து விலகி இருக்க, எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது என்பது கட்டாயமான அவசியமாகிவிட்டது.
இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : 108 என்ற எண்ணிக்கையிலான எலுமிச்சம் பழம், அதனை மாலையாக கோர்ப்பதற்கான ஊசி + நூல், செவ்வாழை பழங்கள்- வெற்றிலை -பாக்கு -பன்னீர் ரோஜா பூ மாலை.
அமாவாசை தினங்களில் உங்களுடைய ஊரின் காவல் தெய்வத்திற்கு உங்கள் கைகளால் கோர்க்கப்பட்ட 108 என்ற எண்ணிக்கையிலான எலுமிச்ச பழ மாலையை சாற்றுங்கள். அத்துடன் 21 என்ற எண்ணிக்கையிலான செவ்வாழை பழங்கள் - மூன்று ஜோடி வெற்றிலை + பாக்குகள் - மூன்று தேங்காய் - பன்னீர் ரோஜா மாலை ஆகியவற்றை படைத்து பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய காவல் தெய்வம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அங்கு பிரத்தியேக கயிறுகளை வழங்குவார்கள். அந்தக் கயிற்றை வாங்கி கைகளில் அணிய வேண்டும்.
இதுபோன்ற பிரார்த்தனைகளை ஒவ்வொரு அமாவாசையின் போதும் மேற்கொள்ள தொடங்கினால் உங்கள் காவல் தெய்வத்தின் பரிபூரண ஆசி கிடைக்கும். இதன் மூலம் உங்களை எந்த துஷ்ட சக்திகளும் நெருங்க இயலாது. மேலும் எம்முடைய சிந்தையும், செயலும் தூய்மையாகி, நல்லனவற்றை மேற்கொள்வதால் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கப் பெறுகின்றன.
தொகுப்பு :சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM