உலகளவில் நானூறு மில்லியன் மக்கள் ஆஸ்துமா பாதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 300 மில்லியன் மக்கள் மட்டுமே முழுமையான விழிப்புணர்வைப் பெற்று பாதிப்பிற்கு சிகிச்சையை பெறுகிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது .
இந்த தருணத்தில் ஆஸ்துமா பாதிப்பை உறுதிப்படுத்துவதற்காக ஃபெனோ டெஸ்ட் (FeNo Test) எனும் நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக உடலில் எத்தகைய சுகவீனங்கள் ஏற்பட்டாலும் அதற்கான சில பிரத்தியேக பரிசோதனை முறைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை வைத்தியர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள். அந்த வகையில் எம்மில் பலருக்கும் பல்வேறு காரணங்களால் ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா எனும் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த நிலையில் ஆஸ்துமா பாதிப்பை உறுதிப்படுத்துவதற்காக வைத்தியர்கள் ஃபெனோ எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
இந்த பரிசோதனையில் ஒவ்வாமை அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் வெளியிடும் நைட்ரிக் ஒக்சைட் குறித்த பரிசோதனை தான் இந்த பரிசோதனை. பொதுவாக இத்தகைய பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நுரையீரல் வீக்கமடைந்திருக்கும். இந்த வீக்கத்தை சுவாசத்தின் மூலமாக உட்செலுத்தப்பட்ட ஸ்டீரொய்ட் மருந்துகள் கட்டுப்படுத்துகின்றனவா? இல்லையா? என்பதனை தெரிந்து கொள்வதற்கும் இந்த முறை பயன்படுகிறது.
பொதுவாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஹேலர் மூலம் சிகிச்சை பெறும் போது சில தருணங்களில் அவர்களுடைய சுவாசம் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள். ஆனால் வைத்தியர்கள் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஃபெனோ டெஸ்ட் எனும் பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.
அதாவது இத்தகைய பரிசோதனையின் போது உங்களுடைய சுவாசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நைட்ரிக் ஆக்சைடின் அளவை துல்லியமாக கணக்கிடுகிறார்கள்.
இந்தத் தருணத்தில் நைட்ரிக் ஒக்சைட் என்பது ஒவ்வாமை அல்லது ஆஸ்துமாவுடன் தொடர்புடைய நுரையீரல் வீக்கத்திற்கு காரணமான செல்களால் உற்பத்தி செய்யப்படும் பிரத்தியேக வாயு ஆகும்.
உங்களுடைய சுவாசத்திலிருந்து வெளியேறும் நைட்ரிக் ஒக்சைடின் செறிவை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். அதே தருணத்தில் நுரையீரல் இயங்குத் திறன் குறித்த பரிசோதனைக்கும், இத்தகைய பரிசோதனைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
இத்தகைய பரிசோதனையில் முடிவுகளை கொண்டுதான் உங்களுடைய ஒவ்வாமை அல்லது ஆஸ்துமாவின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக மருந்தியல் சிகிச்சையை வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள்.
வைத்தியர் சபரி நாத்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM