எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் கால பைரவர் ஆவார். இவரே, கிரகங்கள் அனைத்திற்கும் தலைமைத்துவம் வாய்ந்தவராக விளங்குகின்றார். சித்தர்களுக்கு எல்லாம் சித்தராகவும் கருதப்படும் கால பைரவரை, நாம் வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக இருப்பது அஷ்டமி திதி எனப்படுகின்றது.
வளர்பிறை, தேய்பிறை என்று மாதத்துக்கு இரண்டு முறை வரக்கூடியது அஷ்டமி திதி. இத்திதியில் பணவரவு அதிகரிப்பதற்கும், செல்வங்கள் சேர்வதற்கும் வழிபாடு செய்யலாம்.
குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்யும்பொழுது, நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகுமாம்.
அதுபோல், வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய செல்வ செழிப்பு வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், வளர்பிறை அஷ்டமி நாளில் தான் கால பைரவரை, அஷ்டலஷ்மிகளும் வழிபாடு செய்து, அவர்களுடைய செல்வத்தை அதிகரித்துக் கொள்வார்களாம். அந்த நேரத்தில் நாமும் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது, அஷ்டலஷ்மிகளுக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள் நமக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் வளர்பிறை அஷ்டமி திதி அன்று, திதி நிறைவடைவதற்குள், வெள்ளை குங்கிலியத்தை தூளாக்கி, சாம்பிராணியுடன் கலந்து, தூபம் போட வேண்டும்.
மேலும் அவற்றுடன், பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றையும் கலந்து தூபம் போடும் பொழுது, வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்குவதோடு, பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM