நுவரெலியா மாவட்டத்தில் 610,117 பேர் வாக்களிக்கத் தகுதி ; துஷாரி தென்னகோன்

05 May, 2025 | 01:35 PM
image

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 300 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை (06) நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆறு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று பதினேழு பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் துஷாரி தென்னகோன் மேலும் கூறுகையில், 

இந்த முறை நுவரெலியா மாவட்டத்தில் 18,342 தபால் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 540 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

தேர்தல் பணிகளுக்காக 6,352 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக்காக சுமார் 1,500 அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 63 அரச வாகனங்களையும் 609 தனியார் வாகனங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

நுவரெலியா மாவட்டத்திலிருந்து 2,485 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர், மேலும் அவர்கள் 80 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் ஒன்பது சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

 நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை-லிந்துல நகர சபை, ஹட்டன்-டிக்கோயா நகர சபை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை, அக்கரப்பத்தனை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு 300 உறுப்பினர்கள் இத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50