வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, நீரிழிவு நோயளர்களுக்குப் பாத எரிச்சல் பிரச்சினை இருக்கும்.
உடலில் இரத்த சீனியின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, இரத்தச் சீனி அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
விட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் ஏற்படலாம். குறிப்பாக, பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் (Folate) குறைபாடு இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படும். விட்டமின் ‘பி’ 12, அசைவ உணவுகளில் அதிகம் இருக்கும். அசைவத்தையும் தவிர்த்து, விட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகளை எடுக்கத் தவறுபவர்களுக்குப் பாத எரிச்சல் ஏற்படலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், அல்சர் பிரச்சினை இருப்பவர்கள், ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்தவர்கள், வயிற்றுப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதில் சில நாட்கள் சிக்கல் இருக்கும். அதனாலும் கூட பாத எரிச்சல் ஏற்படும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், அதன் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் உடலில் உள்ள நீரைச் சுத்திகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம். இது யுரேமிக் நியூரோபதி (Uremic Neuropathy) எனப்படுகிறது.
ஆர்த்ரைட்டிஸ், தொற்றுப் பிரச்சினைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதால் பாத எரிச்சல் ஏற்படலாம்.
சில நேரங்களில், சிகிச்சையின் பக்கவிளைவாகக்கூட பாத எரிச்சல் ஏற்படலாம். உதாரணம் புற்றுநோய் சிகிச்சை.
கீமோதெரபியின் பக்கவிளைவாகப் பாத எரிச்சல் ஏற்படலாம். காசநோயாளிகள், `ஐ.என்.ஹெச்' (INH) மருந்து எடுத்துக் கொள்ளும் சில நேரங்களில் பக்கவிளைவாக பாத எரிச்சல் ஏற்படலாம்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம்.
நாம் உண்ணும் சில உணவுகள் மூலம் ஈயம், பாதரசம் போன்ற இரசாயனங்கள் உடலில் சேர வாய்ப்புள்ளது. இவை, ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும் உடலின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். சமையல் பாத்திரங்கள், பரிமாறும் பாத்திரங்களை நன்கு சுத்தப்படுத்தி பரிமாறுவதன் மூலம் இந்த இரசாயனங்கள் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். மேலும், ஈயம், தாமிரப் பாத்திரங்களில் நீண்டநேரம் உணவை வைப்பதைத் தவிர்க்க வேண்டியதும் மிக முக்கியமாகும்.
உடலில் தைரொய்ட் ஹோர்மோனின் சுரப்பு அதிகரித்து நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதாலும் பாத எரிச்சல் ஏற்படலாம். 'ஹைப்போ தைரொய்டிசம்' இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைரொய்ட் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.
சவர்க்காரம் போன்றவற்றின் இரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்பட்டும் பாதத்தில் எரிச்சல் ஏற்படலாம். அப்படி ஏற்படும் பட்சத்தில் சரும மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டியது அவசியம்.
பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில், நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே பாத எரிச்சலின் காரணத்தைக் கண்டறிந்து தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM