திருகோணமலை ரோட்டரிக் கழக 46வது “தொடக்க ஆண்டு விழா” (Charter Day), கடந்த 03ஆம் திகதி மாலை 06.30 மணிக்கு திருகோணமலை ரோட்டரி இல்லத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆளுநர் குமார் சுந்தரராஜ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில், தலைவர் PHF எஸ்.ஜெகதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்திய நிலையில், மறைந்த முன்னாள் ரோட்டரி அங்கத்தவர்கள் நினைவு கூரப்பட்டார்கள்.
இதற்கிடையே, திருகோணமலை ரோட்டரிக் கழகத்தின் முன்னாள் பொதுசன தொடர்பாளர் டொக்டர். ஈ.ஜீ.ஞானகுணாளன் திருகோணமலை ரொட்டரி கழகத்தின் வரலாற்றையும், நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார். அத்துடன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுயநலத்திற்கு அப்பாற்பட்டு சேவை செய்த பன்னிரண்டு சிறந்த ரொட்டரி அங்கத்தவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், தரம் ஐந்து புலமைப் பரிசில் தேர்வு முடிவுகளில் சிறந்து விளங்கிய தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரியை சேர்ந்த ஸ்ரீகுமார் டிலுக்சனா அவர்களுக்கு, பணப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேசமயம், மூன்று பயனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கான மிதிவண்டிகள் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட ஆளுநர் குமார் சுந்தரராஜ், திருகோணமலை ரொட்டரியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய உரையை நிகழ்த்தியதோடு, அடுத்த வருட தலைவர் கே.பிரபாகரன் நன்றி உரை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM