தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17வது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா

04 May, 2025 | 10:28 AM
image

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி, ஞாயிறு இரு தினங்களாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி  யசந்த கொடகொட  பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி யும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இன்றைய, முதல் நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்தில் இருந்து  82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

நாளை இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல்  வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நெளபர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34