உலகளவில் ஒன்றரை லட்ச பச்சிளம் குழந்தைகளில் ஒருவருக்கு மேப்பிள் சிரப் சிறுநீர் நோய் பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது இந்நிலையில் மரபணு மாறுபாடு காரணமாக அரிதாக ஏற்படும் இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கும் சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை பிறந்தவுடன் ஆரோக்கியம் குறித்து பல்வேறு அத்தியாவசியமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் மேப்பிள் சிரப் சிறுநீர் பரிசோதனையும் ஒன்று .
பொதுவாக பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்களின் சிறுநீர், மலம் ஆகியவை நிற மாற்றத்துடன் இருப்பது இயல்பு. ஆனால் அதே தருணத்தில் சிறுநீரில் ஏதேனும் வாசம் ஏற்பட்டால் அது தொடர்பாக உடனடியாக வைத்திய நிபுணரிடம் தெரிவித்து ஆலோசனையும் , சிகிச்சையும் பெற வேண்டியதிருக்கும் . ஏனெனில் இத்தகைய வாசம் மிக்க சிறுநீர் குழந்தை மேப்பிள் சிரப் சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
பொதுவாக இத்தகைய பாதிப்புள்ள குழந்தைகள் தாய்ப்பாலை உணவாக எடுத்துக் கொள்வதில் அசௌகரியம் , எரிச்சல், அதீத சோம்பல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். சில பிள்ளைகளுக்கு சிறுநீர் , வியர்வை, காது மெழுகு ஆகியவற்றில் இருந்து வித்தியாசமான வாசனை ஏற்படும் . சில பிள்ளைகளுக்கு மனச்சோர்வு, பதட்டம், தலைவலி, குமட்டல் ,வாந்தி போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும்.
எம்முடைய உடலில் லியூசின், ஐசோலூசின், வாலின் என மூன்று அமினோ அமிலங்கள் இயல்பான முறையில் செயல்படவில்லை என்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனால் பிள்ளைகளின் கணையம் மற்றும் கல்லீரல் பாரிய பாதிப்பிற்கு ஆளாகும். இத்தகைய தருணத்தில் பிள்ளைகளுக்கு சிறுநீர் பரிசோதனை, குருதி பரிசோதனை மற்றும் பிரத்யேக மரபணு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
நவீன மருத்துவ தொழில்நுட்ப முறையில் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கான நிவாரணத்தை வழங்குவர்.
மேலும் பாதிப்பின் தன்மையை பொறுத்து ஆயுள் முழுவதும் பிரத்யேக உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்வர். சிலருக்கு மட்டும் வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் நேகா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM