கிராமத்து முறையில் சிக்கன் குருமா

02 May, 2025 | 06:41 PM
image

கிராமத்து முறையில் சிக்கன் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள்

  • மசாலா விழுது அரைக்க
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
  • அன்னாசி பூ, கல்பாசி, சோம்பு
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 7 பற்கள்
  • வெங்காயம் - 2 நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
  • தக்காளி - 2 நறுக்கியது
  • உப்பு - 1/4 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • உடைத்த கடலை - 1 மேசைக்கரண்டி
  • கசகசா - 1 தேக்கரண்டி
  • தனியா தூள் - 2 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1/4 கப்
  • குருமா செய்ய
  • சிக்கன் - 1 கிலோ
  • நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பில்லை
  • பச்சை மிளகாய் - 2 கீறியது
  • தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கல்லுப்பு - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 2 1/2 கப்
  • கொத்தமல்லி இலை

செய்முறை

1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து வறுக்கவும்.

2. அடுத்து இதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு இதனுடன் உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். இதை ஆறவிடவும்.

3. மிக்ஸியில் தேங்காய், உடைத்த கடலை, கசகசா, வதக்கிய மசாலா விழுது, தனியா தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைக்கவும்.

சிக்கன் குருமா செய்ய

4. அகல கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

5. அடுத்த இதில் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

6. தக்காளி நன்கு மசிந்ததும், இதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் போட்டு கிளறவும்.

7. அடுத்து இதில் அரைத்த மசாலா விழுது, மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

8. கடாயை மூடி,  30 நிமிடம் கொதிக்கவிடவும்.

9. கடைசியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right