இன்றைய திகதியில் எம்மில் பலரும் வெற்றி பெறுவதற்காக தொடர்ச்சியாக உழைத்து கொண்டிருக்கிறார்கள். பலர் வெற்றியும் பெறுகிறார்கள்.
சிலர் மட்டுமே தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் மாற்று பாதையை சிந்தித்து வெற்றியை நோக்கி பயணிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறாதவர்கள் கவலை கொள்கிறார்கள். கவலை அவர்களின் மனதை நிறைத்து மனதின் ஆற்றலை குறைத்து, மனித வள பயன்பாட்டை குறைக்கிறது. இதனால் வளர்ச்சி தேக்கமடைகிறது.
இந்தத் தருணத்தில் மனதில் உண்டாகும் கவலைகளை குறைப்பதற்கான எளிய வழிமுறைகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மனதில் காயம் ஏற்பட்டவர்கள் கவலை அடைந்தால் தங்களது காயத்திற்கு காரணமானவர்கள் மீது இறைவன் நல்லருளை காண்பிக்க வேண்டும் என்று உங்களுடைய வீட்டில் உள்ள நிலை கண்ணாடி முன் நின்று... கண்ணாடியை பார்த்துக் கொண்டு... மனதால் பேச வேண்டும்.
மனதில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் உங்களுடைய முகத்தில் ஏற்படும் மாற்றம் கண்ணாடியில் பிரதிபலிக்கும். இதை பிரபஞ்ச ஆற்றலால் கண்ணாடி உரியவரை அறத்தின் படி தண்டிக்கும். இதனால் கவலைகள் குறையும்.
மேலும் சிலருக்கு இந்த செயல்களை மேற்கொள்வதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம். இவர்கள் தங்களுடைய கருப்பு வெள்ளை வண்ணத்திலான குடும்ப புகைப்படத்தை வீட்டில் வரவேற்பறையிலும், படுக்கை அறையிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இந்த கருப்பு வெள்ளை வண்ணத்திலான குடும்பப் புகைப்படத்தை நாளாந்தம் பார்க்க நேரிடும் போது.. எம்மில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி, நேர் நிலை ஆற்றலும் அதிகரிக்கும். இதன் ஊடாகவும் எம்முடைய மனக்கவலைகள் விலகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM